பரதேசிஒட்டுப்பொறுக்கியை காதலிக்கும் அங்கம்மாள், பத்மா சுப்ரமணியம் போல திருத்தமான அபிநயங்களுடன் திருமணம் செய்வது போல நடிக்கிறாள். பாரதிராஜா நாயகி போல காதல் பார்வை பார்க்கிறாள், மணிரத்தினம் நாயகி போல ஓடிப்போலாமா என்கிறாள். மேற்கு மாம்பலத்தின் ஆரியக் கவுடா சாலையில் இருக்கும் ஐயராத்துப் பெண் செமஸ்டர் தேர்வு விடுமுறைக்கு சாலூருக்கு வந்து விட்டாளோ என்று குழம்புகிறோம்.
தை கேட்டு வளர்ந்த வரலாறு மனித குலம் முழுமைக்கும் பொருந்தும். ஆனாலும் அந்த கதைகள் ஒரே மாதிரியாக சொல்லப்படவுமில்லை, கேட்கப்படவுமில்லை. வர்க்கம், சாதி, இனம், மொழி, மதம், பால் என பிரிவுகள், ஒடுக்குமுறைகளுக்கேற்ப கதைகளை கேட்கும் செவிகளும் பேசும் வாய்களும் வேறுபடுகின்றன. அம்பானியின் ஆண்டிலியா மாளிகையின் உருவகம் எவ்வாறு நவீன வரம்புகளை உடைத்துக் கொண்டு உயர்ந்திருக்கிறது என ஒரு பின் நவீனத்துவ கட்டிடக் கலைஞனோ ஓவியனோ வியப்பது போல ஒரு தாராவி ஏழை ரசிக்க முடியாது.