சனி, 14 ஜூன், 2014

உலக கோப்பை கால்பந்து கோலாகலமாக துவங்கியது !

சாவ்போலோ: உலக கோப்பை கால்பந்து போட்டி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. இதன் துவக்க விழாவை, உலகம் முழுவதும் 300 கோடி பேர் கண்டு ரசித்தனர்.சர்வதேச கால்பந்தாட்ட கழக கூட்டமைப்பு (பிபா) சார்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான போட்டியை பிரேசிலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது. போட்டியை சிறப்பாக நடத்தும் விதமாக, சகல வசதிகளுடன் கூடிய புதிய மைதானங்கள்,  வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்கான வசதிகள், ரசிகர்களுக்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பிரேசில் நாட்டு அரசாங்கம் சுமார் ரூ.84 ஆயிரம் கோடியை செலவழித்தது.

கங்கையை சுத்தமாக்க பார்பனீயத்தை சுத்தமாக்க வேண்டும் ! இரண்டிலும் அழுக்கு ?

ங்கை நதியில் எச்சில் துப்பினாலோ, பாலித்தீன் பைகள் போன்ற குப்பைகள் போட்டாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற மோடி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையிலேயே கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதை வாக்குறுதியாக அறிவித்திருந்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென உமா பாரதியின் தலைமையில் ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தது.
சரி, இவ்வளவு மெனக்கெடும் அளவிற்கு கங்கையை அசுத்தமாக்கியது யார்? இதுவும் ஐஎஸ்ஐ ‘சதி’யாக இருக்குமோ?
பாகிஸ்தானா, பார்ப்பனியமா?
விடை தேடினால் அது பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைகளையே காரணமாக காட்டுவதால், தண்டனையும், அபராதமும் இந்துக்களிடம்தான் நிறைவேற்ற வேண்டும். எனில் சுத்த கங்கை அபராதத்தின் தொகை சில தினங்களிலேயே திருப்பதி மெகா வசூலை முறியடிப்பது உறுதி.

குஜராத் நானோ கார்தொழிற்சாலை மூடப்பட்டது ! மோடிக்கு விளம்பரம் அள்ளி கொடுத்தது இந்த TATA Nano தான் !

குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ உற்பத்தித் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மக்களின் கார் என்ற அறிவிப்புடன் கோலாகலமாக விற்பனையை ஆரம்பித்த இந்த வகை கார்களின் தேவை தற்போது மிகவும் குறைந்து காணப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கார்கள் உற்பத்தி செய்யக்கூடிய இந்த தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 21,538 கார்களே உற்பத்தி செய்யப்பட்டதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த உற்பத்தியில் 1௦ சதவிகிதம் கூட இல்லை. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் உட்பட அங்குள்ள கையிருப்பு 8 ஆயிரத்திலிருந்து 1௦ ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பொள்ளாச்சி ரேபிஸ்ட் பிடிபட்டான் , கத்தி முனையில் பாலியல் குற்றம் புரிந்தான் !

பொள்ளாச்சி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் வீரன் (என்கிற) வீராசாமியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
இந்த வாக்குமூலம் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. எழுத்து மூலமாகவும் போலீசார் பதிவு செய்கிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:–
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த வீரன் (எ) வீராசாமி ஆகிய நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி பொள்ளாச்சி வந்தேன்.

பாமக திமுக கூட்டணி மீண்டும் ஏற்படுமா ? தினமலரின் செய்தி !

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் கடுமையான விரக்தியில் இருக்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தில் நடக்கவிருக்கும் திருமண விழாவை வைத்து, அடுத்த கட்ட அரசியலுக்கு வித்திடும் யோசனையில் இருப்பதாக, கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.
ராமதாசின் மகன் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், மகள் காந்திமதியின் மகன் ப்ரித்திவனுக்கும் திருமணம் செய்ய, குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கான நிச்சயதார்த்த விழாவையும் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர். விரைவில், திருமண நிச்சயதார்த்த விழா நடக்கவிருக்கிறது. அடுத்த சில மாதங்களுக்குள் திருமணம் நடத்திடவும் முடிவெடுக்கப்படும். அந்த திருமண நிகழ்ச்சிக்கு, அகில இந்திய அளவில் தலைவர்களை அழைக்கவும் முடிவெடுத்திருக்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு ! முதல்வர் கடிதம் !

சென்னை: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை' எனக் கூறிய மத்திய அமைச்சர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமருக்கு விரிவான கடிதமும் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இம்மாதம், 3ம் தேதி, உங்களை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத் தேன். அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்தி இருந்தேன். உங்களிடம் பேசும் போதும், அவற்றின் தேவையை வலியுறுத்தினேன். இது தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையையும், புரிந்து கொண்டேன். இதற்குஇடையில், கர்நாடகாவைச் சேர்ந்த, மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார், பத்திரிகையாளர்களிடம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை' எனக் கூறினார்.  நீதி்மன்றத்தை சாதாரண ஜெயலலிதா எனும் நபரே மதி்ப்பதி்ல்லை சடடமன்றம் மதி்க்கப் போகிறதா?

வெள்ளி, 13 ஜூன், 2014

ஈராக்கில் சதாம் ஹுசெயின் ஆதரவு படைகள் கடும் சமர் ! நகரங்களை கைப்பற்றுகிறார்கள் !

பாக்தாத்:ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசூலை கடந்த 2 நாட்களுக்கு முன் அல்கய்தா ஆதரவு சன்னி பிரிவு தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து திக்ரித், சமரா நகரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா பிரிவு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வசித்து வருகின்றனர். இரு பிரிவினருக்கும் இடையே நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு அதிபராக ஜலால் தல்பானியும் பிரதமராக நூரி அல்மாலிகியும் உள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கின் 2 வது மிகப்பெரிய நகரமான மசூலை கடந்த 2 நாட்களுக்கு முன் அல்கய்தா தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சதாம் உசேன் பிறந்த திகரித் நகரையும் கைப்பற்றினார்கள். சமரா நகரும் தீவிரவாதிகள் பிடிக்குள் வந்துள்ளது.

மும்பை சுமார் 700 நடன பார்களின் 75 ஆயிரம் பெண்கள் நடுத்தெருவில் ? இந்துத்துவ அரசின் தாலிபானிசம் ?


மும்பை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள நடன பார்களுக்கு தடை விதிக்க சிவசேனா பாஜக கூட்டணி  மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. திருத்த மசோதாவில்  3 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில்லும் இந்த தடை உத்தரவை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டபோது எலைட் பிரிவில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் அம்மாநில அரசு புதிய சட்டம் மூலம் அதற்கு தடை விதித்துள்ளது.
இதற்கு அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் சுமார 700க்கும் மேற்பட நடன பார்களில் பணிபுரியும் 75 ஆயிரம் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் எனற கோரிக்கை எழுந்துள்ளது.dinamani.com

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள்: அதிகாரிகளை குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள்

பொள்ளாச்சியில் உள்ள டி.இ.எல்.சி தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் விடுதி ஒன்றில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கோவை கணபதியில் சமீபத்தில் தனியார் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து தனியார் விடுதிகளை முறையாகக் கண்காணிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அதன் தொடர்ச்சியாக தற்போது பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக விடுதியில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பளம் 3,500 லஞ்சம் 6,000: ரேஷன்கடை அதிகாரிகளின் இமாலய லஞ்சம் ! ஊழியர்களால் நேர்மையாக நடக்கவே முடியாது ! லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் !

அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி ரேஷன் அரிசி கடத்தல் என்பது நடக்காத ஒன்று; மாதம் 3,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்பது கொடுமை தான் என, ரேஷன் கடை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தில், பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் முழு நேர ரேஷன் கடைகள், 8,200 பகுதி நேர ரேஷன் கடைகள் என 33 ஆயிரத்து 200 கடைகள் செயல்படுகின்றன. இதற்கு ஒரே வழி மானியங்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை மக்களின் கையில் நேரடியாக கொடுப்பதுதான் , இதைதான் மன்மோகன் சிங் அரசு மெதுவாக ஆரம்பித்தது , ஊழல் பெருச்சாளிகள் அதை முறியடித்து விடுவார்கள். மானியங்கள் என்று கூறப்படுபவை பெருமுதலாளிகள்  அதிகாரிகள்  அரசியல் வாதிகளின் காமதேனு,  பாஜக மக்களுக்கு  ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்றால் மானியங்களை  நேரடியாக மக்களுக்கு கொடுத்து விடவேண்டும்

கலைஞர் : ராமதாசும், நானும் உண்மையை சொன்னோம

மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

உமாபாரதி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட மாட்டாது ! நதிகளை எல்லாம் இணைக்க போறோம்ல ?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும்,
பரிசீலனையில் இல்லை. இப்பிரச்னையில், உச்ச நீதிமன்றம் கூறும் அறிவுரைக்கு ஏற்ப, மத்திய அரசு முடிவு எடுக்கும்,'' என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.
டில்லியில் நேற்று, நிருபர்களைச் சந்தித்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியிடம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கை விடுத்திருந்தார். இது விஷயமாக, அமைச்சக குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதிகாரிகளின் பார்வையில் இருப்பதாக, செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் குழு, பிரதமரை சந்தித்து உள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் நிலை என்ன?' என்று, கேள்வி எழுப்பப்பட்டது.  
பிஜேபி க்கு ஒட்டு போட்ட தமிழன் முதுகுல குத்தும் வண்ணம் உள்ளது..இல்.கணேசன் கருத்து விஷமத்தனமான ஒன்று.2016 இல் இங்கு பிஜேபி கூட்டணி முற்றிலும் புறக்கணிக்க படும்..தமிழக அராசு உடன் நீதிமன்றத்தை நாடவேண்டும் ..

வியாழன், 12 ஜூன், 2014

அம்மா உப்பு ஒரு மோசடி ! 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது அம்மா ரூ.14

jaya-saltம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் சாம்பார் சாதம், பேருந்து நிலையங்களில் பத்து ரூபாய்க்கு அம்மா குடிநீரைத் தொடர்ந்து அம்மா உப்பு அறிமுகமாகியிருக்கிறது. உப்பிட்டவரை மறக்கக் கூடாது என்ற பழமொழியை பண்பாடாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்த உப்பு மட்டுமல்ல, அந்த இட்லியும் கூட இதே நோக்கத்திற்காகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
சரவண பவன்களும், வசந்த பவன்களும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் நாட்டில் அம்மா இட்லி இருந்தாக வேண்டுமல்லவா? கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக உழைக்கும் தமிர்களை ஆக்கிய பிறகு கஞ்சித் தொட்டி திறப்பது இருவகையில் இலாபம். ஒன்று வள்ளல் பட்டம். இரண்டு வறுமையின் கோபத்தை மட்டுப்படுத்துவது.

மனுஷ்யபுத்திரன் கமல் போன்ற பார்ப்பன அறிவாளிகளுக்கு ஒரு இஸ்லாமிய துருப்புச் சீட்டாக ...

2

//மனுஷ்யபுத்திரனை மறுத்துவிட்டு தான் உங்களை வாசிக்கனுமா தோழர்?// - Ansari Thameemull.
என்னை வாசிப்பதை விடுங்கள்…
திராவிட இயக்க உணர்வு பொங்குகிற மனுஷ்யபுத்திரன், தனது உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர்களுக்கு தருகிற விருதின் பெயர் ‘பெரியார் விருதா?’ இல்லை, அவர் அதிகம் கொண்டாடுகிற ‘கலைஞர் விருதா?’
இவர்கள் பெயரில் விருது இல்லை என்பது கூட பிரச்சினையில்லை. ஆனால், பெரியாரை விரோதியாக, திராவிட இயக்கத்தை கேவலமாகப் பார்த்த இந்து, பார்ப்பன ஜாதி வெறியர் சுஜாதா பெயரில் தான் அந்த விருது.
சரி, திராவிட இயக்க உணர்வை விடுங்கள். இலக்கியத்தில் தகுதி குறித்து அதிகம் பேசுகிற மனுஷ்யபுத்திரன்,
தனக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியற்ற எழுத்தாளர் சுஜாதா பெயரில் விருது வழங்குவதுதான் இலக்கியத்திற்கான தகுதியா?

உ.பி.யில் இளம் பெண்னை போலீஸ் நிலயத்தில் வைத்து கற்பழித்த போலீசு ! நாடு விளங்கிடும்ல ?

உத்தரப் பிரதேசத்தில் நான்கு காவல்துறையினர் சேர்ந்து ஒரு பெண்ணை, கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சமர்பூர் காவல் நிலையத்தில், வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தனது கணவனைப் பார்க்க இளம் பெண் ஒருவர் சென்றார். அப்போது அங்கியிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் , 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம் பெண் மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை காவல்நிலைய வளாகத்திலிருந்த காவல்துறையினர் குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் மூன்று காவல் துறையினர் சேர்ந்து அந்த பெண்னை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.

அஜீத் தனது 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.

நடிகர் அஜீத்குமார் தன்னிடம் வேலை செய்யும் 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
நடிகர் அஜீத் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் தன்னிடம் பணிபுரியும் வீட்டுக் காவலாளி, சமையல்காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கி அவரவர்களின் பெயரில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.

லண்டன் :மருமகளின் கண்ணை தோண்டியெடுத்த சீக்கிய பயங்கரவாதம் !

மருமகளின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்த மாமனார் - லண்டனில் அதிர்ச்சி சம்பவம் !!
பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மருமகள் மீது சந்தேகப்பட்ட மாமனார் ஒருவர், குழந்தைகளின் கண் முன்னே, அவர்களின் தாயாரின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து கொடூர தண்டனை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. லண்டனில் உள்ள சீக்கிய குடும்பம் ஒன்றின் தலைவர் 51 வயது .Manjit Singh Mirgind. இவர் தனது மகனுக்கு Jageer Mirgind என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஒரு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர இந்நிலையில் முஸ்லீம் ஒருவரிடம் இருந்து தனது மருமகளுக்கு போன்கால் ஒன்று வந்துள்ளது. போனில் பேசியவர் ஆபாசமாக பேசியதால், தனது மருமகள் முஸ்லீம் நபர் ஒருவருடன் கள்ளக்காதல் கொண்டுள்ளதாக தவறாக எண்ணிய மாமனார், ஆத்திரமடைந்து மருமகளின் கண்களை அவருடைய குழந்தைகளின் கண்முன்னே தோண்டி எடுத்து கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.

3 ஜாதகத்தோடு பெற்றோர் அலையுறாய்ங்க ! ஆனா அனுஷ்கா பிடிகொடுக்கிராப்பல இல்லையாம் ?

நடிகை அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் 3 மாப்பிள்ளைகள் பார்த்து வைத்துள்ளனர்.அனுஷ்காவுக்கு பின்னர் திரையுலகுக்கு வந்த அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணக்கிறார். நஸ்ரியா நாசிம் நடிகர் பஹத் பாசிலை மணக்கிறார். ‘ஜூனியர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார்கள். அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்’ என்று அவரது பெற்றோரிடம் உறவினர்கள் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்களாம். இதையடுத்து அனுஷ்காவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் பெற்றோர். பல மாப்பிள்ளைகளை பார்த்து அதில் தொழில் அதிபர், திரைப்பட இயக்குனர், இன்ஜினியர் என 3 மாப்பிள்ளைகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் யாரை அனுஷ்காவுக்கு பிடிக்கிறதோ அவருக்கு மணம் முடித்து வைக்க எண்ணி உள்ளனர். ஆனால் இதுபற்றி அனுஷ்கா தனதுமுடிவை இன்னும்

Chennai மெட்ரோவுக்கு பிரேசில் ரயில் பெட்டிகள் வரத்து !

சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரெயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் ரூ.1471.3 கோடி செலவில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி 9 ரெயில்கள் பிரேசில் நாட்டிலும், 33 ரெயில்கள் ஆந்திரா மாநிலம் தடா ஸ்ரீ சிட்டியில் உள்ள அல்ஸ்டாம் ரெயில் நிறுவனத்திற்கான ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து தயாரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 9 ரெயில்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இருந்து 3 ரெயில்கள் ராட்சத லாரிகள் மூலமாகவும் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு டிராக் சோதனை, உள்சோதனை, மின்சார இணைப்புகளுக்கான சோதனைகள் நடந்து வருகிறது.

மாற்று சினிமா ஏன் இன்னும் அழுத்தமான பயணத்தை ஆரமிபிக்கவில்லை ?

தன் படம் வெளியாவதற்கு முந்தைய நாள், வெளியாகவிருக்கும் ஒரு திரையரங்கிற்குச் சென்று அன்று இரவுக் காட்சியில் ஒரு பெங்காலிப் படத்தை பார்த்து அப்படத்தால் தாக்கம் அடைந்து 'இந்த படத்தை தூக்கி என் படம் வெளியாக வேண்டுமா? வேண்டாம். என் படம் இங்கே வெளிவர வேண்டாம். இப்படம் இங்கேயே வெகு நாட்கள் ஓடி வெள்ளிவிழா காணட்டும் என்று கூறி, திரையிடப்பட்ட அந்த பெங்காலி படத்தின் இயக்குனரை சந்தித்து உங்கள் படம் பார்த்தேன். என்னை ரொம்ப ஈர்த்தது. என் படத்தை நான் விலக்கிக் கொள்கிறேன், உங்களை போன்ற கலைஞர்கள் நமது நாட்டிற்கு தேவை' என்று பதேர் பாஞ்சாலி பார்த்து இயக்குனர் சத்யஜித்ரே'விடம் இதைக் கூறியவர் தான் எஸ்.எஸ்.வாசன். 
 இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.'
சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது.

குருபெயர்ச்சி : குருபகவான் கூட ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கிறார் ? ஏத்தி ஏத்தி விழ்த்த போறாய்ங்க !

ஒரு சொம்பு தூக்கி ஜோதிடனின் பிரடிக்சன் :
 ஜெயலலிதாவின்  மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ( பிரவீன் தயவுல )எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். நேற்று வரை, எதிரிகளாக, எதிர் அணியில் இருந்த பலர், இவரின் தலைமையை ஏற்பர். உடலில் ஆரோக்கியமும், புதிய நம்பிக்கையும் உண்டாகும்.அச்சுறுத்தல்களையும், வழக்குகளையும், எதிர்ப்புகளையும், சமாளிக்கும் சக்தி உண்டாகும். உடன் இருப்பவர்களில், நம்பிக்கை துரோகிகளையும், தவறானவர்களையும், விரட்டி அடிப்பார்.
வரும் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 6:04 மணிக்கு, கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். கடக ராசியில், குரு பகவான் உச்சமாக பிரவேசிக்கும் நேரத்தில், குரு பகவானின் ஆட்சி வீடான தனுசு ராசியில், சந்திரன் சஞ்சரிப்பதுடன், அது, தனுசு லக்னமாகவும் அமைகிறது. இதன் காரணமாக, இந்த குருபெயர்ச்சி, மேலும் சிறப்படைகிறது.குரு பெயர்ச்சியான எட்டாம் நாளே, குரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில், கேது பகவானும், புதன் பகவானின் உச்ச வீடான கன்னியில், ராகு பகவானும், வரும் 21ம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளனர்.இந்த நேரத்தில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு, குரு, ராகு, கேது கிரகங்களால் உண்டாகும் பலன்கள் குறித்து, ஜோதிடர்கள் கூறியதாவது:  ஏம்பா எல்லோருக்கும் தெரிந்ததைதான் சொல்லியிருக்கீங்க இதை சொல்ல சோதி்டர் எதற்கு எழும்பூர் பெங்களூருக்கு எப்ப போகனும்னு ஒருத்தரும் சொல்லலியே அந்த வழக்குகள் எல்லாம் என்னாகும்

புதன், 11 ஜூன், 2014

நடிகர் ஜெய் முஸ்லிமாகிவிட்டாராம் ! இனி பலதார குற்றம் கிடையாது ?

யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார்.இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை மொஹமத் காலிக் யுவன் என்றும் மாற்றிக் கொண்டார். இவரைத் தொடர்ந்து, ராஜா ராணி, சென்னை&28, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து சென்னை தி நகரில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார். பின்னர் தனது இணைய தள பக்கத்திலும் ‘அல்ஹமதுல்லஹா என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘அழகி, ‘சிலந்தி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மோனிகாவும் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மறியதுடன் தனது பெயரை எம்ஜி ரஹீமா என்று மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. - See more at: .tamilmurasu.org

விஜயகாந்த் கட்சியை பாஜகவுக்கு விற்க தயக்கம் ? ஏன் ? பேரம் படியல்லையா ?

தேர்தல் தோல்விக்கு பின் பா.ஜ.,வுடன் தே.மு.தி.க.,வை இணைப்பதற்கு ஆர்வம் காட்டிய விஜயகாந்த், திடீர் என தயக்கம் காட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. இதனால், கட்சிக்காரர்கள் சோர்வடைந்துஇருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட தே.மு.தி.க., வரும் செப்., மாதத்தில், 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கஉள்ளது.<மக்கள் பிரதிநிதி இல்லை கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், பல தேர்தல்களை தனித்து சந்தித்து, தனக்கு 10 சதவீத ஓட்டு பலம் இருப்ப தாக நிரூபித்தது அந்த கட்சி. இருந்தும், அந்த கட்சியால், குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு, மக்கள் பிரதிநிதிகளை பெற முடியில்லை.இதனால், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க.,வுடன் கூட்டணிஅமைத்து, 43 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 தொகுதி களில் வெற்றியும் பெற்றது. இந்த வெற்றி மூலம், தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, சட்டசபையில் எதிர்க்கட்சிஅஸ்தஸ்தையும் பெற்றது.  இப்போ இருக்கற விலை இன்னும் குறைந்து தான் போகும், உடனே விற்றுவிட்டால் துட்டு பார்க்கலாம்? அப்புறம் காசு கொடுத்தாலும் யாரும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்?i

பயங்கரவாதிகள் படங்களுடன் மோடி படம்: கேரள கல்லூரி இதழில் வெளியீடு

கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரில் தீவிரவாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் சேர்க்கப்பட்டதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலரின் ஒருபக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி, ‘அன்னை’ தெரசா, தாகூர், விவேகானந்தர், லெனின், நெல்சன்மண்டேலா உள்பட பலரது படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. மற்றொரு உள்பக்கத்தில், எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பின் கீழ் பிரபல சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், அஜ்மல் கசாப், பின்லேடன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ஆகியோரது படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

இமாச்சல் வெள்ளபெருக்கு மரணங்கள் மணல்மாபியாவின் கைங்கரியம் ! அறிவிப்பின்றி அணையை திறந்தது ஏன் ?

இமாசலப் பிரதேசம் மாநிலம் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பின்னணியில் மணல் கடத்தல் கும்பலே காரணமாக உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், தெலுங்கானா பகுதியை சேர்ந்த 25 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போதைய நிலையில், அவர்களில் 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்க கடற்படையை சேர்ந்த ஆழ்கடல் வீரர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கிற்கு, அணையின் கதவு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திறக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் : ஜெயலலிதா அறிக்கை ! முதல்ல அம்மையார் ஆத்துல உள்ளவங்களோட வயசை செக் பண்ணுங்க ?

குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்  இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைப் பருவ உரிமைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை நினைவுப்படுத்தும் வகையில் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” -- எனும் அவ்வை பிராட்டியின் பொன் மொழிக்கிணங்க எண்ணும் எழுத்துமாகிய கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்வழி காட்டிடும் கண்களைப் போன்ற பெருமை மிக்கது என்பதை பெற்றோரும், மற்றோரும் உணர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழித்து குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு முறையான கல்வி அளித்து வாழ்வில் மேம்படுத்திட வேண்டும் என்பதே எனது தலைமையிலான தமிழக அரசின் நோக்கமாகும்.

இமாச்சல் அதிர்ச்சி விடியோ ! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்! 24 Hydrabad students swept away in Himachal


ஐதராபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் துறைசார்ந்தோர் உள்ளிட்டோர் 48 பேர் இமாசலபிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 24 மாணவி-மாணவிகள் கடந்த 8-ந் தேதி மணலி அருகே தலோத் என்னும் இடத்தில் பியாஸ் ஆற்றின் கரையோரம் நின்றவாறு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது நீர் மின்உற்பத்திக்காக அங்குள்ள பந்தோ அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோரம் நின்று கொண்டிருந்த 6 மாணவிகள், 18 மாணவர்கள், சுற்றுலா பொறுப்பாளர் பிரகலாத் ஆகிய 25 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடும் பணி நீடித்து வருகிறது.

உன் சமையல் அறையில் பிரமாதமாமே ? ரசிகர்களுக்கு பிடிக்கும் !

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’சால்ட் அண்டு பெப்பர்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிகை சினேகா மற்றும் ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா ஆகியோர் உன் சமையல் அறையில் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.தொல்பொருள் ஆய்வாளராக பணியாற்றும் பிரகாஷ் ராஜ், ஆய்வு செய்வதிலேயே தனது இளமைக் காலங்களை கழித்துவிடுகிறார். சிற்பங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், உணவையும் ஆய்வு செய்து ருசியாக சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர் பிரகாஷ் ராஜ். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் பெண்ணைப் பார்க்காமல் அருமையான வடையைச் சுட்ட தம்பி ராமையாவை தன் வீட்டிற்கு சமையல்காரனாக அழைத்துவந்துவிடும் அளவிற்கு உணவின் மீது பிரியம் கொண்டவர்.

நடிகை ரகுல் பிரீத் சிங். 2011 சர்வதேச சுற்றுலா இந்திய அழகி -

நடிகை ரகுல் பீரித் சிங்குக்கு கார் ஓட்ட தடை விதித்தார் அவருடைய தந்தை.தமிழில் ‘என்னமோ ஏதோ, ‘தடையற தாக்க, ‘புத்தகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். 2011ம் ஆண்டு சர்வதேச சுற்றுலா பிரிவில் இந்திய அழகி பட்டம் வென்றவர். அவர் கூறியதாவது:தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நடிகையான பிறகு எனது சம்பாத்தியத்தில் கார் வாங்கினேன். தற்போது நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனது கார் மும்பையில் இருக்கிறது. அதை ஓட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் 4 மாதத்துக்கு ஐதராபாத்திலேயே இருக்க வேண்டி இருப்பதால் காரை ஐதராபாத் அனுப்பவேண்டும் என்று என் தந்தையிடம் கேட்டேன். அவர் மறுத்துவிட்டார்.

திருப்பதியில் யோகா மையத்தை திறக்க ராம்தேவுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

சீமாந்திரா முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவை நேற்று யோகா குரு ராம்தேவ் சந்தித்து பேசினார். நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த ராம்தேவிடம் சீமாந்திராவில் உள்ள திருப்பதியில் மிகப்பெரிய யோகா மையத்தை திறக்கவேண்டும் என்று நாயுடு கேட்டுக்கொண்டார். அத்துடன் அங்கு மருத்துவ மூலிகை பண்ணையையும் தொடங்கவேண்டும் என்றும் அவரிடம் நாயுடு கூறினார்.இது குறித்து ராம்தேவ் கூறுகையில், சந்திரபாபு நாயுடு எனது சகோதரரை போன்றவர். அவரது விருப்பத்தை நான் பரிசீலித்து நல்ல முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது நாயுடுவின் மகன் லோகேஷ் உடனிருந்தார்  அழகான பெண்களின் படங்களை தான் நீங்க ரசிப்பீங்களா என்ன ?  (அழகான ?) இரண்டு  ஆண்களின்  அணைப்பு காட்சியை ரசிக்க முடியாதா என்ன ? காபரெட் சாமியும் காபரெட் அரசியல் கில்லாடியும் சேர்ந்த என்ன நடக்கும் ? காசு காசு காசு ?  maalaimalar.com

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு ! பிரதமரிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை !

புதுடெல்லி: காவிரி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவின் மேல் முறையீடு மனு நிலுவையில் இருப்பதால், நடுவர் மன்ற உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை, பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான சர்வகட்சி தலைவர்கள் நேரில் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கை அடங்கிய மனுவையும்  அவர்கள் கொடுத்தனர்.

மகாராஷ்டிராவில் 4 மாதங்களில் 559 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 559
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மாநில சட்டமன்றக் குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நாளொன்றுக்கு 3 விவசாயிகள் வீதம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.< இயற்கை பேரிடர் காரணமாக 85 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.11 கோடி நிவாரணம் அளித்திருப்பதாகவும் மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் பதங்ராவ் காதம் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.tamil.thehindu.com

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: விரைவில் இந்தியா ரஷ்யா ஒப்பந்தங்கள்

மாஸ்கோ: இந்தியா, கடந்த 2010ல் நிறைவேற்றிய, அணு உலை பாதிப்பின் போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு சட்டத்தை, ரஷ்யா ஏற்றுக் கொண்டதால், தமிழகத்தின் கூடங்குளத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பது விரைவில் கைகூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடு எந்த விதத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, 2010ல், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ஏற்க ரஷ்யா முன்வராததால், கூடங்குளத்தில் அமைய இருந்த, 3 வது மற்றும் 4 வது அணு உலை திட்டங்கள் தாமதமாகி வந்தன.

செவ்வாய், 10 ஜூன், 2014

அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி ! பணம் காசு துட்டு மணி தேர்தல் ஆணையம் ,,,,

மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ”வரலாறு காணாத” வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை. ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ந்து கொண்டிருக்கும் கடுமையான மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, தண்ணீர் பஞ்சம், மணற் கொள்ளை, தலைவிரித்தாடும் குற்றச்செயல்கள் போன்ற அனைத்துக்கிடையிலும், நம்ப முடியாத இந்த வெற்றியை ஜெ. எப்படிப் பெற முடிந்தது என்ற கேள்விக்குப் பதிலாக, தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் தேர்தல் செய்திகளைத் தொடர்ந்து வாசித்தவர்கள் கீழ்க்கண்ட விடயங்களை அவதானித்திருக்க முடியும். துவக்கத்தில் நாற்பதும் அ.தி.மு.க.வுக்கே என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஊடகங்கள், தேர்தல் பிரச்சாரம் பாதி நாட்களைக் கடந்திருந்த நிலையில், அ.தி.மு.க. 15 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு வாப்பில்லை என்று உளவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. கருத்து கணிப்புகளும் இதையே உறுதி செய்வதாக ஜெ ஆதரவு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளுமே செய்தி வெளியிட்டன.
இத்தகைய சூழ்நிலையில்தான், இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், ”இரவு பத்து மணிக்கு மேல் வேட்பாளர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்யலாம்” என்று மாநில தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் அறிவித்தார். ”இது அதிமுகவின் பணப்பட்டுவாடாவுக்கான ஏற்பாடு” என்று கூறி எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன; ஆனாலும் பயனில்லை.
பிறகு காஷ்மீர், வட கிழக்கிந்தியா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட இல்லாத வகையில் தேர்தலுக்கு முதல் நாள் இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தார் பிரவீண் குமார். இதுவும் பணப்பட்டுவாடாவுக்குத்தான் என்று எல்லா கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். பயனில்லை.தமிழகத்தின் தற்போதைய  தலைவர் இவர்தான் . இவரது  ராஜதந்திரம் அல்லது நரித்தந்திரம் 37 தொகுதிகளை வென்றுவிட்டது , தருமபுரி ஜாதிவெறியும்  கன்னியாகுமரி மதவெறியும் மாத்திரம் இவரால் வெற்றி கொள்ள முடியாமல் போனது ,  அதிமுகவுக்கு இந்த பிரமாண்ட வெற்றியை ஏன் அள்ளி கொடுத்தார்?

கங்கையில் எச்சில் துப்பினால் ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை ?

மத்திய அரசு பரிசீலனை;கங்கை நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமாபாரதிக்கு மத்திய அமைச்சரவையில் நீர்வளம், கங்கை சீரமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரியாக பதவி ஏற்றுள்ள உமாபாரதி, கங்கையை சுத்தம் செய்ய சபதம் எடுத்துள்ளார். முதற்கட்டமாக, இது குறித்து நான்கு துறைகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கங்கையில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களைப் பிடித்து ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறைத்தண்டனை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதேபோன்று கங்கையில் குப்பைகளைக் கொட்டவும் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அப்ப உச்சாவுக்கு ? nakkheeran.in

அத்வானிக்கு பாராளுமன்றத்தில் மீண்டும் தனி அறை கிடைத்துவிட்டதாம் , ம்ம்ம் எல்லாம் நேரம் ?

அத்வானியின் தனி அறையில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டதை
அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றப்புள்ளி வைக்கும் விதததில், அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தின் 4ம் எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. திடீரென அவரது அறையின் வாயிலில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் நடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் அறையிலேயே ஒய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது அத்வானி 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அறைக்கு வெளியே மீண்டும் அவரது பெயர்ப்பலகை பொறுத்தப்பட்டுள்ளது.   இதுக்காகவா நான் அயோத்திக்கு கமண்டலம் தூக்கி  வடக்கும் தெற்கும் யாத்திரை யாத்திரையா அலைஞ்சு ... அட நாம தோத்திருந்தா கூட நல்ல இருந்திருக்குமே . இப்ப அழவும் முடியாம சிரிக்கவும் முடியாமா பண்ணி புட்டானே ? எனக்கு வேணும் எனக்கு வேணும் , இப்படி தனியா மண்டபத்தில ஒரு  அறையும் இல்லாம புலம்ப வச்சுட்டானே அந்த ... இப்ப பாரு பேரை ஸொல்ல கூட  முடியல்ல டா சாமி  ?  பெரிசு பேசாம மானாட மயிலாட மாதிரி ஏதாவது பாக்க போயிடலாம்னே! வேறொன்னுமில்ல பெரிசு எல்லாம் நீங்க  செஞ்ச வினைதான் கெடுவான் கேடு நினைப்பான்

அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

சென்னை: மலிவு விலையில் ‘அம்மா உப்பு' விற்பனையை முதல்வர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார் அம்மா உணவகம் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த பிரேசிலில் 10 லட்சம் செக்ஸ் தொழிலாளர்கள் ரெடி!

ரியோடி ஜெனிரோ: உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப்பதற்காக,பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ள பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கால்பந்து ரசிகர்கள் வருகை 20வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள், 12ம்தேதி, தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை கண்டு ரசிக்க உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.  ம்ம் கொடுத்து வச்ச பயலுவ ! போலீசுக்காரன் மாமுல் தொல்லை இனி இல்லை ! கொடூர பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் வணிகத்தை சட்ட ரீதியாக்கவேண்டும் . gang ரேப்பில தினம் தினம் போய்க்கினே இருக்கிற மானத்தை விட இதுல ஒன்னும் அதிகம் போயிடாது ~!

அப்பாவி மோகனம்பாள் கரகாட்டம் ஆடி சுமார் 4 கோடி சம்பாதித்தார் ! இதுவல்லவோ சுயமுன்னேற்றம் ?

வேலூர்: தன்னுடைய வீட்டில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள 4 கோடி ரூபாய் பணம் கரகாட்டம் ஆடியதன் மூலமும்,வட்டிக்கு கொடுத்தும் சம்பாதித்தது என்று கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், வசந்தபுரம் இந்திர நகரை சேர்ந்த கரகாட்ட பெண் மோகனாம்பாள் வீட்டில், 75 சவரன் தங்க நகைகள், 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா ஆகியோர் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியிடம் கொடுத்த மனு விபரம் குறித்து அவர்களுடைய வழக்கறிஞர் பாபுராஜன் கூறியதாவது: ''மோகனாம்பாளும், அவரது குடும்பத்தினரும் கரகாட்டம் ஆடியது மற்றும் அதனால் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டே பணம் சம்பாதித்துள்ளனர்.சீக்கிரமே அவள் விகடன்  சிநேகிதி  போன்ற  பெண்கள் சுயமுன்னேற்ற  வார இதழ்கள்  இந்த  அதி  அபார  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்  நாணயமும் உள்ள மோகனம்பாளை பற்றி எழுதவேண்டும்  , மத்த பொம்பளைங்களும் முன்னேரனும்ல ?

செல்வராகவன் : இப்போதைக்கு படம் இயக்க மாட்டேன் ! முதல்ல இரண்டாம் உலகம் படக்கதைய விபரமா சொல்லுங்க சார் !

அடுத்த படம் இயக்குவது எப்போது என்பதற்கு பதில் அளித்தார் செல்வராகவன்.இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா-அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க முடிவு செய்ததுடன் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவும் எண்ணி உள்ளார். சிம்பு படத்தை தொடங்குவதற்கான பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.இதுபற்றி செல்வராகவனிடம் கேட்டபோது,‘நான் இப்போது படம் இயக்குவதிலிருந்து இடைவெளி விட்டிருக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் இயக்குவதுபற்றி கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு அப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்.

கடல் உயிரினங்கள் 40 ஆண்டுகளில் அழியும் அபாயம்'

சென்னையில் நடைபெற்ற உலகப் பெருங்கடல் தின விழாவில் பேசிய கயா அமைப்பின் இயக்குநர் பி. நம்மாழ்வார்.சென்னையில் நடைபெற்ற உலகப் பெருங்கடல் தின விழாவில் பேசிய கயா அமைப்பின் இயக்குநர் பி. நம்மாழ்வார். கடலின் உயிர் சூழல் பாதிப்பால் வரும் 40 ஆண்டுகளில் கடலில் கிடைக்கும் மீன்கள் முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாக கயா அமைப்பின் இயக்குநர் பி.நம்மாழ்வார் கூறினார்.
சென்னை எழும்பூரில், கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், மீன் தர மேலாண்மை மற்றும் வளங்குன்றா மீன் வள பாதுகாப்பு இணையம் ஆகியவை இணைந்து உலகப் பெருங்கடல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
இந்த ஆண்டு "ஒன்றுபடும்போது பெருங்கடல்களை பாதுகாக்கும் ஆற்றலை நாம் பெறுவோம்' என்பதை கருப்பொருளாகக் கொண்டு "உலகக் கடல்கள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கயா தன்னார்வ அமைப்பின் இயக்குநர் பி.நம்மாழ்வார் பேசியது:

மோடியரசின் கவர்ச்சி : நாடு முழுவதும் புதிதாக 100 நகரங்கள் !

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், நாடு முழுவதும், 100 நகரங்களை மத்திய அரசு உருவாக்கும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்' என, ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் பதவியேற்ற பின், பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உரை நிகழ்த்தினார். &அப்போது, அவர் கூறியதாவது:'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற, தாரக மந்திரத்தின் அடிப்படையில், புதிய அரசு செயல்படும். புதிய அரசு, ஏழைகளுக்காக அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏழ்மையை ஒழிப்பதே இந்த அரசின் குறிக்கோள்.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அதிக முன்னுரிமை வழங்கப்படும்.   ஜனாதிபதி உரையில மட்டுமா கவர்ச்சி இருக்கு..ஆரம்பம் முதலே ஒரே கிளு கிளுப்பா தான போயிட்டு இருக்கு..

காவியிருளில் எல்லா அதிகாரங்களையும் தானே கையிலெடுத்துக் கொள்ளும் மோடி?

மோடி - முதலாளிகள்தச்சார்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையே தந்திருக்கின்றன. எனினும் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இப்படி ஒரு முடிவின் தவிர்க்கவியலாமையை நாம் புரிந்து கொள்ள முடியும். தேர்தல் பிரச்சாரத்தின் முதல் சுற்றிலேயே தான் படுதோல்வி அடையவிருப்பதை காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ ஒப்புக் கொண்டு விட்டது. ஒருவேளை பாரதிய ஜனதா கட்சிக்குப் பதிலாக மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், அது விரைவிலேயே பதவிச் சண்டைகளால் தன்னைத்தானே கவிழ்த்துக் கொண்டு, ”வலிமையான நிலையான மோடியின் ஆட்சி” வருவதற்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும்.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றிராமல், அ.தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட ”மதச்சார்பற்ற” கட்சிகளின் ”தயவில்” ஆட்சி அமைத்திருந்தால் அக்கட்சிகள் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும்  கடிவாளம் போட்டிருப்பார்கள் என்று நாம் நம்புவதற்கு இடமிருக்கிறதா?

புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின் சத்துணவு திட்டம் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும், ஏழை, எளிய மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்து வருகின்றனர்.சத்துணவில், சாதம், சாம்பார், அவித்த முட்டை, பச்சைப் பட்டாணி சுண்டல், உருளைக் கிழங்கு கூட்டு ஆகிய, உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சத்துணவில், காலத்துக்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்து, 2012 நவம்பரில், புதிய வகையில், 13 வகையான, உணவு முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.அதன்படி, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, நாள் வாரியாக, தக்காளி சாதம், காய்கறி சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம், கலவை சாதம் மற்றும் வாரத்தில், மூன்று நாட்களுக்கு, அவித்த மற்றும் மசாலா முட்டை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், நாள் வாரியாக, 'பிரைடு' ரைஸ், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், கீரைச் சாதம், தக்காளி சாதம், அவித்த மற்றும் மசாலா முட்டை, பருப்பு மற்றும் பொரியல் ஆகியவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. சத்துணவில் முட்ட போட்ட கலைஞருக்கு மக்கள் தேர்தலில் முட்ட போட்டு நன்றி கடன கட்டினார்கள் , நல்லவர்களின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா அதான் இந்த திட்டம் ஆட்டம் காணுது

வீட்டுக்கு வெள்ளை, நீலகலரில் பெயின்ட் அடித்தால் சொத்து வரிவிலக்கு: கோல்கட்டா மேயர் அதிரடி

கோல்கட்டா: வீட்டிற்கு, குடியிருப்பு கட்டடத்திற்கு நீலம் மற்றும் வெள்ளை
கலர்களில் பெயின்ட்அடித்தால் சொத்து வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் கோல்கட்டா மேயர் அறிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல்காங். கட்சியின் ஆட்சிநடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அம்மாநில அரசியலில் "தீதி" என்றே அழைக்கப்படுகிறார்.இவருக்கு மிகவும் பிடித்த கலர் வெள்ளை மற்றும் நீல நிறம். நீல பாடர் போட்ட வெள்ளை கலர் சேலையை தான் எப்போதும் அணிந்திருப்பார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் திரிணாமுல் காங். ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தலைமை செயலகம், அரசு கட்டடங்கள் ,போலீஸ் ஸ்டேசன், அரசு போக்குவரத்து கழக பஸ்கள், பொது டாக்ஸிகள், ஆகியன மம்தாவிற்கு பிடித்தமான வெள்ளை, மற்றும் நீல கலராக மாற்றப்பட்டது.  இது நம்ம ஊரு புண்ணாக்கு மாதிரியே இருக்கு ....

திங்கள், 9 ஜூன், 2014

மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !

சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு  காலாவதியாகி போன ‘மெட்ரிகுலேசன்’ என்ற அடைமொழியை, தனியார் பள்ளிகள் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
ஜூன் மாதம்.  பள்ளிகள் துவங்கிவிட்டன. வேட்டைக்கு காத்து நிற்கும் நரி போல,தனியார் பள்ளிகள் பிரமாண்ட விளம்பரங்களை  கடந்த இரண்டு மாதங்களாக தினசரி செய்தித்தாளில்  கொடுத்து வருகின்றனர். வேட்டையில் ஏதும் தெரியாத அப்பாவிகளை சிக்க வைப்பதற்கென்றே, தங்கள் பள்ளிகளின் பெயருக்கு பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் எனப் பெயர் போட்டு, வெளியிடுகிறார்கள். இத்தகைய பெயர்கள் போட்டால் ஏதோ மாபெரும் கல்வி கற்பிக்கப்படுகின்றது, ஆங்கிலம் அருவி போல கொட்டுகிறது, வேலை வாய்ப்பு காத்துக் கொண்டிருப்பதாக உருவாக்கப்பட்ட மாயையில், பெற்றோர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மருத்துவ கல்லுரிகளின் மாபியா கொள்ளை ! ஒரு கோடியை தாண்டும் cost of டாக்டர்

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
இத்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் தமிழ் திரை உலகம்

நாமே அறியாமல் நம்மை கொள்ளை அடிக்கிறார்கள். மெய்மறந்து திரையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நம் பாக்கெட்டில் இருந்து பணம் உருவுகிறார்கள். ஐந்தோ பத்தோ அல்ல. வருடா வருடம் பல நூறு கோடி ரூபாய். யார் அப்பன் வீட்டு காசு?‘கோச்சடையான் படத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரிவிலக்கின் பலன் மக்களுக்கு தரப்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு வந்தபோது நிறைய பேர் ஆச்சரியமாக அச்செய்தியை வாசித்தார்கள். சினிமாவில் வரிவிலக்கு என்பது மக்களுக்கான உரிமை என்பதையே முதன்முதலாக இப்போதுதான் அறிகிறார்கள். தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சில திரையரங்குகள் மட்டுமே அந்த உத்தரவினை ஏற்று கேளிக்கை வரி வசூலிக்காமல் கட்டணத்தை குறைத்தன. சென்னையில் தேவி சினிப்ளக்ஸ் போன்ற அரங்குகளின் வழக்கமாக டிக்கெட் கட்டணம் ரூபாய் நூற்றி இருபது. ஆனால் கோச்சடையான் திரைப்படத்துக்கு எண்பத்தி நான்கு ரூபாய் முப்பது காசு மட்டுமே வசூலித்தார்கள். படம் பார்த்த ஒவ்வொரு ரசிகருக்கும் வரிவிலக்கின் காரணமாக முப்பத்தைந்து ரூபாய் எழுபது காசு லாபம். அப்படியெனில் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கும் கூட முழுமையான டிக்கெட் கட்டணமாக நூற்றி இருபது ரூபாய்தானே கொடுத்துக் கொண்டிருந்தோம்? அந்த பணம் அரசின் கஜானாவுக்கும் போகவில்லை எனில், யார் எடுத்துச் சென்றார்கள்.

பார்ப்பனர்களுக்கு எதிரான பேச்சு , கி,வீரமணி மீது வழக்கு

பிராமணர்களுக்கு எதிராக பேசுவதற்கும் போராடவும் கி.வீரமணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  சிவகாசி வழக்குரைஞர் வி.கார்த்திகேயன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
   மனு விவரம்: தஞ்சை மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ண அய்யர் பிராமணாள் கபே விளம்பர பலகையை அகற்றுமாறு நவ.2012-ல் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன் போராட்டம் நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக திருவானைக்காவலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நடத்திய போராட்டத்தில் பிராமண வர்ணாசிரமத்தை அனுமதிக்க முடியாது என வன்முறையை தூண்டும் விதமாக வீரமணி பேசியுள்ளார்.

இறந்த பெரியாரியல்வாதி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண்கள்

திருச்சியில் இறந்த பெரியாரியல்வாதி ஒருவர் உடலை, பெண்கள் ஆறு பேர் சுமந்து சென்று அடக்கம் செய்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் வைரமுத்து . இவர் உடல் நலக்குறைவால் இறந்தார். பெரியார் கொள்கையில் பற்று கொண்டிருந்த இவரது இறுதி அடக்க நிகழ்வுகளை பெண்களை கொண்டு நடத்துவதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி வைரமுத்துவின் உடலை கருப்பு உடை அணிந்த 6 பெண்கள் அவரது வீட்டில் இருந்து சுமந்துகொண்டு டோல்கேட் வழியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு சென்றனர். அங்கு வைரமுத்துவின் மனைவி செல்வி, அவரது மகள் சாந்தி மற்றும் அவரது உறவுப் பெண்களே அடக்க நிகழ்வுகளை நடத்தினர். இறந்தவர் உடலுக்கு பெண்களே அடக்க நிகழ்வுகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. tamil.oneindia.in

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றுச் சென்றனர்.
மக்கள் நிலயான அரசுக்கு வாக்களித்துள்ளதாக நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை முக்கிய அம்சங்கள்:
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

மஞ்சப்பை ! கோச்சடயான் வசூலை டேமேஜ் செய்து .... சும்மா அதிருதில்லை ?

ராஜ்கிரன், விமல், லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் வெளியாகியிருக்கும் மஞ்சப்பை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் தாத்தா செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் ஹைலைட் என்கின்றனர் ரசிகர்கள். மேலும் மஞ்சப்பை திரைப்படம் கோச்சடையான் திரைப்படத்தின் முதல்நாள் கலெக்‌ஷனின் 70 சதவீதத்தை கலெக்‌ஷன் செய்திருக்கிறதாம். கோடிகளை விழுங்கி ஏராளமான செயற்கை  பில்டப்புக்களைகட்டி  எழுப்பி  ...கேவலம் ஒரு சின்னஞ்சிறு  மஞ்சப்பை நம்மள வச்சு டமாசு பண்ணிடுச்சு !

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றவுடன் பயிர் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து !

விஜயவாடா: புதிய ஆந்திர மாநிலத்தின் முதலாவது, முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்றிரவு பதவியேற்றார். தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர மாநிலத்தில் நடைபற்ற சட்ட சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சட்டசபை கட்சி தலைவராக அதாவது முதல்வராக சந்திரபாபு நாயுடுவை அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்திருந்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 7.27 மணிக்கு ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார்.

144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் ! மறுதேர்தல் குறித்து பரிசீலித்து வருகிராய்ன்க ? after five years?

பெரம்பலூர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதால் அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
சிவகாசியிலுள்ள ’கேலக்ஸி டிரஸ்ட்’டின் தலைவர் தமிழ்ச் செல்வன். கடந்த 6-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்த இவர், ’தமிழகத்தில் அனைத் துத் தொகுதிகளிலும் வாக்காளர் களுக்கு தாராளமாக பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையமோ பிற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என மனு அளித்துள்ளார்.

பாஜக சர்வம் மோடிமயமாகிறது ? பெருசுகளுக்கு கவர்னர் பதவி ! கட்டாய ஒய்வு ?

பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் ஜஸ்வந்த் சிங், லக்னெள தொகுதி முன்னாள் எம்.பி. லால்ஜி தாண்டன், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் கைலாஷ் ஜோஷி மற்றும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கேசரிநாத் திரிபாதி ஆகியோரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
இவர்களில் கான்பூர் தொகுதி எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கல்யாண் சிங் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.

கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

கராச்சி:பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு புகுந்து பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்கு 13பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 10 பயங்கரவாதிகள் உள்பட 21 பேர் பலியானார்கள் .மேலும் இரு விமானங்களும் சேதமடைந்தது .கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் புகுந்த 15 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை போல போலியான அடையாள அட்டையை காட்டி உள்ளே புகுந்து, அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். பயங்கரவாதிகள் மேலும் கையெறி குண்டுகள் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அப்பகுதியை சுதாரித்து சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனையடுத்து விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளையும் சீல் வைக்கப்பட்டன.

ஞாயிறு, 8 ஜூன், 2014

பெங்களூரில் பாட்டியை கொன்று கொள்ளை அடித்த பேத்தி கைது !

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது பாட்டியை சமையலறையில் இருந்த பூரி கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற பேத்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.< இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கொலை குற்றவாளியான ஹர்ஷிதா மைசூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அவருக்கு வயது 19.  இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க ஹர்ஷிதா விரும்பியுள்ளார்.< பாட்டி ராமரத்னம்மா அதற்கு அவருக்கு பணம் தேவைப்பட்டு உள்ளது.  அவரது பாட்டி ராமரத்னம்மாவை (வயது 75) சந்தித்து அவரிடம் நிதி உதவி கேட்டுள்ளார்.  இந்நிலையில், கடந்த மே 10ந்தேதி ஹர்ஷிதாவின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.  தனியாக இருந்த பாட்டியை சமையலறையில் இருந்த பூரி கட்டையை கொண்டு ஹர்ஷிதா தாக்கியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் ஞானதேசிகனை சந்திக்க 72 மணிநேரம் காத்திருந்த தியாகி எம் ஆர் சந்திரன் !

இனியாவது கோஷ்டிகளை ஒழித்துவிட்டு, ஒற்றுமையாக இருங்கள். கட்சியை காப்பாற் றுங்கள். இளைய சமுதாயத்தின் நலனுக்காக காமராஜர் ஆட்சியை கொண்டுவர பாடுபடுங்கள்’’ என்று கெஞ்சிக் கேட்பதற்காக வந்த 77 வயது தியாகி எம்.ஆர்.சந்திரன், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவரை சந்திக்க 7 மணி நேரம் காத்திருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக் கிழமை நடந்தது.
அனுமதிக்காத நிர்வாகிகள்
இதுபற்றி கேள்விப்பட்டு காங்கிரஸ் தியாகியும், காங்கிர ஸின் முதல் சென்னை மாவட்ட கலைஞர்கள் அணித் தலைவராக வும் இருந்த 77 வயது முதியவர் எம்.ஆர்.சந்திரன் போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தார். அடடே காங்கிரஸ் இன்னும்கூட மிட்டா மிராசு ஜமீந்தார் கட்சியாகவே இருக்குல!

4 கோடியுடன் போலீசுக்கு தண்ணி காட்டும் கரகாட்டகாரி மோகனம்பாள் !

வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த கரகாட்டக்காரி மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ. 4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் சரவணனின் மனைவி தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.

2ஜி வழக்கால்தான் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் !

2ஜி வழக்கில், காங்கிரஸுக்கு எதுவும் தொடர்பில்லை என்ற உண்மையை
தேர்தலுக்கு முன்பு மக்களிடம் விளக்கியிருந்தால், இந்தத் தோல்வி வந்திருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடந்தது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசியதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: கெடுவான் கேடு நினைப்பான் !திமுகவை போட்டு பிடிக்க உருவாக்கிய சதிவழக்கு  காங்கிரசையே விழுங்கிய கதைதான் ஞானசேகரன்  சொல்லும் கதை ,  இதன் பின்னணியில் நிச்சயம் ராகுல் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது , கூடவே தயாநிதி மாறனின் நச்சு கைகளும் இருக்கிறது