ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பாக். பஞ்சாபில் தற்கொலைத் தாக்குதல் உள்துறை அமைச்சர் பலி

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் மீது நடத்தப்பட்டுள்ள பெரும் தற்கொலைத் தாக்குதலில், உள்துறை அமைச்சர் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, அவர் மோசமாக காயமடைந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ஷுஜா கான்ஸாடா ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்.
வன்முறைகளில் ஈடுபடும், தடைசெய்யப்பட்ட சுன்னி முஸ்லிம் குழுவொன்றின் தலைவரை போலீசார் கொன்றுள்ளதாக கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார்.
அட்டொக் நகரில் இன்று நடந்துள்ள தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தா bbc.tamil.com

கருத்துகள் இல்லை: