புதன், 20 ஏப்ரல், 2016

பிர­பா­க­ரனின் பாது­காப்பு படையணியை சேர்ந்த எழிலன் காலியில் துப்பாக்கியுடன் கைது!! பாதாள கூலிப்படையில்!

ilakkiyainfo.com: பலப்­பிட்­டிய நீதி­மன்றின் முன்­பாக இடம்­பெற்ற இரட்டைக் கொலை உள்­ளிட்ட பல கொலை­க­ளுடன் தொடர்­பு­டைய தென்­னி­லங்கை பாதாள உலகக் குழுவின் துப்­பாக்­கி­தாரி என நம்­பப்­படும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்­பினர் ஒருவர் கைத்­துப்­பாக்­கி­யுடன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
காலியில் வைத்து குறித்த சந்­தேக நபரை விசேட அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது.
விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை பாது­காக்கும் விசேட ஆயுத படை­ய­ணி­யான சார்ள்ஸ் அன்­டனி படை­ய­ணியின் முக்­கிய புள்­ளி­யாக திகழ்ந்த எழிலன் என புலி­களால் அறி­யப்­படும் நபரே இவ்­வாறு கைது செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
ஸ்டேன்லி கெனடி பெர்­ணான்டோ என்ற இயற் பெயரை உடைய இந்தச் சந்­தேக நபர் கிரிஷான் எனும் பெய­ரி­லேயே தெற்கு பாதாள உலகில் வலம் வந்­துள்­ள­தா­கவும் கொழும்பு கொட்­டாஞ்­சேனை, ஜம்­பட்டா வீதியைச் சேர்ந்த இவர் கொட்­டாஞ்ச்­சே­னையில் இடம்­பெற்ற பெண் ஒரு­வரின் கொலை­யு­டனும் தொடர்புபட்­டவர் என விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, கடந்த ஞாயி­றன்று விசேட அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வுப் பிரி­வுக்கு தென் பாதாள உலக் குழுவின் துப்­பாக்­கி­தாரி தொடர்பில் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.
இத­னை­ய­டுத்து காலியில் வைத்து அதி­ர­டிப்­ப­டையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, அதி­ரடிப் படை புலனாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் வருணு ஜய­சுந்­தர ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சென­வி­ரத்ன தலை­மை­யி­லான குழு­வினர் குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­தனர். இதன்­போது அவ­ரிடம் கைத்­துப்­பாக்கி ஒன்றும் இருந்­துள்­ளது.
இத­னை­ய­டுத்து அவரை விசா­ரணை செய்த போதே சந்­தேக நபர் முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பினர் என்­பது தெரியவந்­துள்­ளது.
கொழும்பு, கொட்­டாஞ்­சேனை ஜம்­பட்டா வீதியைச் சேர்ந்த குறித்த சந்­தேக நபர், மீன் சந்­தையில் வேலை செய்த வவு­னி­யாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஊடா­கவே விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்ளார்.
பின்னர் சார்ல்ஸ் அன்­டனி படை­ய­ணியில் 5 வரு­டங்கள் இருந்­துள்ள அவர் இரா­ணுவ தாக்­கு­தல்­க­ளினால் மூன்று முறை காய­ம­டைந்­துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த குறித்த சந்­தேக நபர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் 21 மாதங்கள் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்ட பின்னர் புனர்­வாழ்­வுக்­காக பூஸா முகா­முக்கு அனுப்­பட்­டுள்ளார்.
இதன் போதே தெற்கு பாதாள உல­கத்­துடன் சந்­தேக நப­ருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கின் பிரபல பாதாள உலக குழுவான கொஸ்கொட சுஜித்தின் குழுவுடனேயே சந்தேக நபர் பூஸா முகாமிலிருந்த போது தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: