வெள்ளி, 27 மே, 2016

கோர்ட்டில் போராட்டம் நடத்த தடை..சட்ட திருத்தம்! பார் கவுன்சின் அதிகாரத்தை நீதிபதிகள் பறிக்கும் செயல்?

சென்னை: வக்கீல்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண காரணங்களுக்கு கூட அடிக்கடி கோர்ட் வளாகங்களுக்குள் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் கூட பலமுறை நடந்திருக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இப்போது ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டியுள்ளது ஐகோர்ட்.சமீபத்தில் ஐகோர்ட் கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசிதழில் வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


வக்கீல்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அந்தந்த நீதிபதியே வக்கீல்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு எதிராக செயல்படும் வழக்கறிஞருக்கு தடை விதிக்கப்படும். நீதிமன்ற வளாகத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினால் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும். நீதிமன்ற ஆவணங்களை திருத்தினாலோ, நீதிபதி பெயருக்கு அவதூறு பரப்பினாலோ வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும்.

நீதிபதியின் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் செயலில் ஈடுபட்டால், நீதிமன்றத்தில் மதுபானம் அருந்தி சென்றால் தடை விதிக்கப்படும். ஐகோர்ட், மாவட்ட கோர்ட்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
மாவட்ட நீதிமன்றங்களை பொறுத்த வரை முதன்மை நீதிபதிக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கலாம். ஐகோர்ட்டிற்கு உள்ள அதிகாரத்தின்படி இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது தினமலர்.com

கருத்துகள் இல்லை: