வெள்ளி, 22 ஜூலை, 2016

தியேட்டர் கட்டணங்களில் ஊழல் அப்புறம் என்ன ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்? ஜெயா டிவி+ ஜாஸ் சினிமாஸ் = கபாலி !

jazz-companyகபாலியின் அலங்கோலங்களுக்கு யார் காரணம்..?
இந்த அலங்கோலங்களுக்கு முழு முதற் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பெருமக்கள்தான். யார்தான் லஞ்சம் வாங்கலை.. யார்தான் ஊழல் செய்யலை என்று நமது மக்கள் என்றைக்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே இந்த சமூகம் அவலத்தை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. இன்றைய ‘கபாலி’ வெளியிட்டூு சூழலிலும் அதுதான் நடக்கிறது.
படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை பெற்றிருப்பது ஜெயா டிவி. தமிழக தியேட்டர் உரிமத்தை பெற்றிருப்பது ஊரை அடித்து உலையில் போடுவதில் கோபாலபுரத்தை மிஞ்சிய சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ் நிறுவனம். பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அரசு நிர்வாகங்கள் வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்
அரசாங்க முத்திரையோடு அமைச்சரின் PA விடமிருந்து 10 கபாலி டிச்கெட் கேட்டு அபிராமி தியேட்டர் ஊழியருக்கும் செல்லும் கடிதம்
‘தெறி’ படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் சில தியேட்டர்களில் அதிரடி சோதனை நடத்தி ‘கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் தியேட்டர் சீல் வைக்கப்படும்’ என்று சில மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்தார்கள்.
‘விடியற்காலை ஷோ ஓட்ட வேண்டும்’ என்று ‘தெறி’ படத்தின்போதுஅனுமதி கேட்ட தியேட்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது ‘காவல்துறையினரை அவ்வளவு விடியற்காலையில் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க முடியாது’ என்றது அரசு நிர்வாகம்.
ஆனால் இன்றைக்கு அந்த சூழல் அப்படியே நேர்மாறாக இருக்கிறது. தியேட்டரிலேயே டிக்கெட் கட்டணத்தையே குறிப்பிடாமல் நுழைவுச் சீட்டை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது உலகத்திலேயே வேறெங்கும் நடக்காத ஒரு அதிசயம் இது.
எந்த வகையிலும் அரசு அனுமதியில்லாமல் தியேட்டர் கட்டணங்களை உயர்த்துவது நிச்சயம் சட்ட விரோதம்தான். யாரோ காசு கொடுக்கிறான் என்றாலும் அதனை அனுமதிப்பதும் ஊழல்தான்.
ஒட்டு மொத்தமாக 3 நாளைக்கான காட்சிகளை பலம் வாய்ந்த கும்பல்களின் கைகளில் கொடுத்து அவர்களிடமிருந்து டிக்கெட் விலையைவிடவும் 10 மடங்கு தொகையை வசூலித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட மிகப் பெரிய ஊழல் வேறென்ன இருக்க முடியும்..? கொடுக்கிறவன் இருக்கும்வரையிலும் லஞ்சமும், ஊழலும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
இப்போது 120 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 ரூபாய்க்கு தங்களிடமிருக்கும் பணத் திமிரினால் அள்ளி வீசி டிக்கெட்டை வாங்கியிருக்கும் இதே உத்தம நண்பர்கள்தான், ஒரு போலீஸ்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் அதை செல்போனில் போட்டோ எடுத்து முகநூலில் போடுவார்கள்.
படம் வெளியீடும் தேதி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே ஆல்பர்ட் தியேட்டரில் ரிசர்வ் செய்ய்ப்பட்டது.

இன்றைக்கு அவர்கள் இந்தக் கபாலிக்கு செலவழித்திருக்கும் ஒவ்வொரு ரூபாயும், சக சாமான்ய மக்களு்ககு எதிராக அவர்கள் வீசியிருக்கும் விஷ அம்புகள்தான்..!
யார் இதைக் கேட்பது..? இதைச் செய்ய வைத்திருப்பதே மாநில முதலமைச்சரும், அவருடைய உடன் பிறவா குடும்பத்தினரும்தான். அவரது அனுக்கிரஹம் இல்லாமல் யாரும் இதை செய்திருக்க முடியாது..!
கொடுமை.. கொடுமை என்று கோவிலுக்கு போனால்.. அங்கேயும் ஒரு கொடுமை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடியது என்பார்களே.. அது இதுதான்..!
தியேட்டர் கட்டணங்களில் இத்தனை ஊழல்களை திரைப்படத் துறையினரே செய்துவிட்டு, ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என்றும், ‘திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையத்தளங்களை செயல்படவிடக் கூடாது’ என்றும் சொல்வதெல்லாம் தனக்கு வந்தால் மட்டுமே அது ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி ரசம் என்பதுதான்..!
120 ரூபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டு “படம் பார்க்க வா..” என்று சொல்லியும் கேட்காமல், திருட்டு டிவிடியில் படம் பார்த்தால் அது தவறு என்று சொல்வதுகூட ஒரு விதத்தில் நியாயம்.
ரீலிஸ் தேதிக்கு முந்தைய நாளில் இரவு 11 மணியிலிருந்து திரையிடப்பட்டது.
கனடாவில் விடிய விடிய கபாலி – ஏமாறுவதில் உள்நாடு வெளிநாடு வேறுபாடில்லை.
ஆனால் அநியாயமாக 1000 ரூபாய்க்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்துவிட்டு “நீ திருட்டு டிவிடியில் பார்க்காதே…” என்று சொல்வது எந்த வகையில் நியாயம்..?
இங்கே யார் நீதி, தர்மம், நியாயமெல்லாம் பேசுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது..!
தயாரிப்பாளர் தாணுவும், ரஜினியும் பிலாத்து மன்னனை போல “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கை கழுவ முடியாது.. இந்தப் பாவத்தில் அவர்களுக்கும் பெரும் பங்குண்டு..
இ்பபோதுவரையிலும் அவர்களிடமிருந்து ஒரு செய்திகூட வரவில்லை. ஒரு தடுப்பாணைகூட வரவில்லை. ஆக.. இந்தக் கோல்மாலில், ஊழலில், முறைகேட்டில் அவர்களுக்கும் மறைமுகமான ஒப்புதல் உண்டு என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை நோக்கிய பாதை அல்ல.. அழிவை நோக்கிச் செல்லும் பாதை.. பணம் படைத்தவனும், அதிகாரம் படைத்தவனும் மட்டும்தான் கோடம்பாக்கத்தில் இனிமேல் நீடிக்க முடியும் என்பதை இந்தக் ‘கபாலி’ சுட்டிக் காட்டியிருக்கிறான்..!
இப்படி படத்திற்கு முன்பேயே விமர்சனம் எழுத வைத்தது ஒன்றுதான், இந்தப் படத்தின் மூலம் சாமான்யனுக்கு கிடைத்திருக்கும் லாபம்..!

கருத்துகள் இல்லை: