செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

செவாலியே விருது பெற்ற ஆசிரியர் மதன கல்யாணி.. 2010 இல் இவற்றுக்கு இவ்விருது வழங்கப்பட்டது

thetimestamil.com :பலர் நினைப்பதுபோல், சினிமாத்துறையைச் சேர்ந்த சிவாஜி
கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு மட்டுமல்ல, பிரெஞ்சு-தமிழ் ஆசிரியர் மதனகல்யாணி என்பவரும் செவாலியே விருது பெற்றிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு மதனகல்யாணிக்கு, பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. மதனகல்யாணி சிலப்பதிகாரத்தை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்.
மேலும் இவர் குறித்து முனைவர் மு. இளங்கோவன் எழுதிய பதிவு இங்கே:
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்னும் பாரதி வாக்குக்கு ஏற்ப அமைதியாகத் தமிழ்ப்பணியைப் புதுச்சேரியில் ஆற்றி வருபவர் அம்மா மதனகல்யாணி அவர்கள். தமிழ்ப்பற்றும் தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்ட இவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சுமொழிகளில் வல்லவர். இவர்தம் பெற்றோர்: தந்தை: செ. கிருட்டினசாமி (காவல்துறை ஆணையர், தாய்: கி. இராசாம்பாள்.
மதனகல்யாணி அவர்கள் 5-10-1938 இல் புதுச்சேரியில் பிறந்தவர்.
பக்காலோரேயா (BACCALAURÉAT) DIPLÖME DE BACHELIER DE L’ENSEIGNEMENT SECONDAIRE (UNIVERSITY OF PARIS) – 1958) – 1958 (பாரிஸ்பல்கலைக்கழகம்), புலவர் தமிழ் – 1974 (சென்னை பல்கலைக்கழகம்), முதுகலை பிரஞ்சு (MASTER OF ARTS: FRENCH )- 1974 -( கர்நாடகப் பல்கலைக்கழகம் : தார்வார்),கணினி பயிற்சி (INITIATION A WINDOW 95 – WORD 95 – Agence pour l’enseignement français à l’étranger) – 1997 பெற்றவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டு தமிழ் பயிற்றுவித்தவர். பணிபுரிந்தவர்.
பிரஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் பயிற்றுவித்தவர். அதுபோல் தமிழர்கள் பலருக்குப் பிரஞ்சு பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.அவ்வகையில்:
I -பிரஞ்சு மொழியை அயல்நாட்டார்க்குக் கற்பிக்கும் முறை
(DIDACTIQUE DU FRANÇAIS LANGUE ETRANGÈRE, CREDIF), ப்ரோவான்ஸ் பல்கலைக்கழகம், 1982 (பிரான்சில் சென்றெடுத்த பயிற்சி) – தமிழ் கற்பிக்கவும்; பயன்பட்டது)
II – கணினி வாயிலாகப் போதித்தல்; (INFOR MATIQUE ET PÉDQGOGIE) France: L’ IDEN en résidence à Pondichéry, 1989
III – வகைப்படுத்துதல் போதனாமுறை – (PÉDAGOGIE DIFÉRENCIÉE – Ambassade de France en Inde) – 1993
IV – கல்லூரிகளில் போதனாமுறையைத் திருத்தி அமைத்தல்(RENOVATION PÉDAGAOGIQUE DES LYCÉES (Ambassade de France en Inde) – 1993
v – கேட்சி – காட்சிக் கல்வி (UTILISATION DES MOYENS AUDIOS -VISUELS ET INTÉGRATION-Ambassade de France en Inde) – 1993
vi – பள்ளியும் குடியுரிமையும் (ECOLE ET CITOYENNETE – Agence pour l’enseignement français à l’étranger) – 1998
என்னும் சான்றிதழ்க்கல்வி குறிப்பிடத்தக்கனவாம்.
பிரஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
1, பிரஞ்சிலிருந்து தமிழில்
– குட்டி இளவரசன் (அன்த்துவான் தெ சேன்த் எக்சுய்பேரி).
– கொள்ளைநோய் (நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ஆல்பெர்ட் கம்யூஸ்).
– புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு (ழெரார் துய்வால்),,,
2, தமிழிலிருந்து பிரஞ்சில்
– புதுச்சேரி நாட்டுப் புறப்பாடல்கள்
– புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள்
– கரையெல்லாம் செண்பகப்பூ (சுஜாதா)
3, கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்
4, கவிதை நூல்கள்
– ஆராதனை
– தூறல்
5, ஆங்கிலத்திலிருந்து பிரஞ்சில்
Les aspects de la culture Tamij (The aspects of Tamil culture by Dr. KOTHANDARAMAN, Former Vice – Chancellor of Chennai University)
மற்றும் கட்டுரைகள். நாடகங்கள்
மதனகல்யாணி அவர்களின் தமிழ்,பிரஞ்சு இலக்கியப் பணிகளைப் பாராட்டிப் பல அமைப்புகள் விருதுகளையும் பாராட்டுகளையும்,பரிசில்களையும் வழங்கியுள்ளன.
விருதுகள்-பட்டங்கள்
பிரஞ்சு நாட்டிலிருந்து…
அ – செவாலியே (CHEVALlER DANS L’ ORDRE DES PALMES ACADEMIQUES) – 2002 (France)
ஆ – Diplôme de MENTION SPECIALE : L’ACADEMIE DE PROVENCE- 1995 – France
இ – PRIX D’HONNEUR : L’ACADEMIE DE PROVENCE- (France) 1995- புதுச்சரி நாட்டுப்புறக்கதைகள் (பிரஞ்சு)
ஈ – PREMIER ACCESSIT : Grand Concours littéraire International – 1999, L’ACADÉMIE …DE PROVENCE- FRANCE.
தமிழ்
அ – மணிக்கவி மஞ்ஞை – பாராட்டு நன்மங்கலம் – உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992
ஆ – சிறந்த எழுத்தாளர் விருது – 1996 – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் – புதுச்சேரி மாநிலக்கிளை,
இ – தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – நற்சான்றிதழ் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு – 2002 கோலாலம்பூர்(மலேசியா),
ஈ – பாராட்டிதழ் – தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி
உ – பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் – 1990 – புதுச்சேரி
ஊ – பாராட்டிதழ் – புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் – 1999 – புதுச்சேரி
எ – பாராட்டிதழ் – பாவேந்தர் பாசறை – 2003
ஏ – நாடகத்துறை சான்றிதழ் – சவகர்லால் நேரு இளைஞர்க் கழகம் – சென்னை கிளை டூ 1976
ஐ-புதுவை அரசின் கலைமாமணி விருதினை 2007 ஆண்டுக்குப் பெற்றவர்.
மதனகல்யாணி அவர்களின் பல்வேறு இலக்கிய முயற்சிகளுக்கும் அவர்தம் கணவர் திரு.த. சண்முகானந்தன் (செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி ஓய்வு. புதுச்சேரி மாநிலம்) அவர்கள் பேருதவியாக உள்ளார்கள்.மதனகல்யாணி அவர்களுடன் உடன் பிறந்தோர் 5 பேர்.பிள்ளைச்செல்வங்கள் மூவர்.மூவரும் முறையே டில்லி,அமெரிக்கா, துபாயில் பணியில் உள்ளனர்.
மதனகல்யாணி அவர்கள் அமெரிக்கா,பிரான்சு,மலேசியா நாடுகளுக்குச் சென்று வந்தவர்.பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.அவரின் குடும்ப நண்பர் என்பதில் பெருமைகொள்பவர்.
அன்பும் அமைதியும் கொண்டு புதுச்சேரியில் தமிழ்ப்பணியாற்றும் செவாலியே மதனகல்யாணி அம்மா அவர்களின் வழியாகத் தமிழ் இலக்கிய வளம் அயல்நாடுகளுக்குப் பரவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ச.மதனகல்யாணி அவர்களின் முகவரி:
19. குபெர் தெரு. இராசீவ்காந்தி நகர்.
புதுச்சேரி – 605011
குறிப்பு: முகப்புப் படமும் மதனகல்யாணி பற்றிய பதிவும் முனைவர் இளங்கோவனின் அனுமதியுடன் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: