செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

புதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா?


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுபினர் சசிகலா புஷ்பா,
நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக விமானம் மூலமாக தமிழக வந்தார்.< அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இவர் வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி இவரது எம்.பி. பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சசிகலா புஷ்பா மக்கள் புதிய கட்சியை துவங்கலாம் என்ற செய்தி முன்னதாக உலா வந்தது.சசிகலா புஷ்பா சில
பேட்டிகளில் தான் சார்ந்த சமூகத்தின் பெயரை சொல்லி பேட்டி கொடுத்தார். நாடார் சமூகத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா அந்த இன மக்களை குறிவைத்து கட்சி ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வருவதற்கு முன்னர் சசிகலா புஷ்பா கார்கள் புடை சூழ தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இது அவர் புதிய கட்சி தொடங்க அடித்தளம் என பேசப்படுகிறது.மக்கள் அதிமுகவை தொடங்கி, தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் நாடார் இனத்தை குறிவைத்து ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கி சில நாட்கள் கழித்து இரு கட்சியையும் ஒன்றாக சேர்ர்க்கும் பிளானில் சசிகலா புஷ்பா உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான ஒத்திகையே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த நிக்ழ்வு எனவும், இதன் பின்னணியிலும் மணல் மனிதர் இருப்பதாக பேசப்படுகிறது.வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: