வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெயலலிதாவுக்கு சிறப்பு பூஜை:இந்து அறநிலைய துறை உத்தரவு!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுக்க அதிமுகவினர் கோயில்களில் பிராத்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் ஒரு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ளார். 'இன்று மாலை 4 மணிக்கு கோயில்களில் நடை திறக்கப்பட்டதும் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். இதை அந்தந்த கோயில் நிர்வாக அலுவலர்கள் கவனித்து கொள்ள வேண்டும்' எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடுகள் தீவிரம். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: