சனி, 24 செப்டம்பர், 2016

அப்போலோ நோயாளிகள் கடும் அவஸ்த்தை .. அம்மா இருக்காய்ங்க .. கெடுபிடியோ கெடுபிடி!

புதிதாக இன்று வந்த புறநோயாளிகள் யாரும் மருத்துவமனைக்குள்
அனுமதிக்கப்படவில்லை. அதேபோல உள்ளே தங்கியிருக்கும் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் இன்று அனுமதி இல்லை. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே, வெளியே போகமுடியாமல் போலீஸார் தடுத்தனர்.
* தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும் அப்பல்லோ மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களையும்கூட ஜெயலலிதா உள்ள இரண்டாவது தளத்துக்கு அனுமதிக்கவில்லை.
* அமைச்சர்கள் அனைவருமே தரை தளத்தில் உள்ள வரவேற்பு அறையில்தான் அமர்ந்தபடியும், நடந்தபடியும் இருக்கிறார்கள்.
* அப்போலோ மருத்துவமனை சாலையில் போக்குவரத்தை போலீஸார் நிறுத்திவிட்டனர்.
Special Correspondent FB Wing முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: