புதன், 21 செப்டம்பர், 2016

திமுகவின் முதுகில் குத்திய மூப்பனாரும் வாசனும் .. எந்நன்றி கொன்றார்க்கும்.....

கலைஞர் எப்போது திருந்துவார் ?
*******************************************************
1996 ல் கருப்பையா மூப்பனாருக்கு 40 தொகுதிகளை வாரிக்கொடுத்து...வெற்றி பெற வைத்து... சிதம்பரம் போன்ற சில்லறைகளை தலைவர்களாக உயர்த்திவிட்டார்..(இன்று அவரால் அவர் சொந்த ஊரில் கூட ஒரு வார்டில் கூட ஜெயிக்கமுடியாது )
அதற்கு பரிசாக மூப்பனார் என்ன செய்தார் தெரியுமா ?
மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்த துரோகி கலைஞர் என்று என்று பழி சுமத்தினார்....மேலும் 2001 ல் ஜெயாவோடு கூட்டணி வைத்து கலைஞரை தோற்கடித்து பழி வாங்கினார்..மூப்பனார்...

தந்தையை பின் பற்றி...கடந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க நால்வர் அணியோடு இணைந்தார் ஜி கே வாசன்... டெபாசிட் இழந்த நிலையில் தங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக மீண்டும் கலைஞரை தேடி வருகிறார் ....
ஜெயாவை நேரடியாக ஆதரித்து ஜெயா வெற்றிக்கு வழி வகுத்த வாசனுக்கு அறிவாலயத்தில் என்ன வேலை ?
வாசன் போயஸ் தோட்டத்துக்கு போகட்டுமே...
தலைவர் தவறுக்கு மேல் தவறு செயகிறார்..
திமுக விற்கு யார் தயவும் தேவை இல்லை...மக்கள் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள் நமக்கு மக்களோடு மட்டும் கூட்டணி போதும்.
காங்கிரஸ் உட்பட யாரோடும் கூட்டணி வேண்டாம்..
செத்த பிணங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டாமென்று தலைவரை பணிந்து வேண்டுகிறேன்.  முகநூல் பதிவு   தாமோதரன்  சென்னை

கருத்துகள் இல்லை: