புதன், 28 செப்டம்பர், 2016

பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 50) மாரடைப்பால் நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, படங்களில் பனாரஸ் பட்டுகட்டி, என் உச்சி மண்டையில சுர்ருங்குது, மஞ்சனத்தி நாட்டுக்கட்ட மைய வச்சி மயக்கிபுட்ட, போட்டது பத்தல மாப்ள என்று நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.  ஹரிதாஸ் படத்தில் இவர் எழுதிய, அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே என்று பாடல் இவருக்கு நல்ல பெயரை தந்தது.  நிறைய பக்திப்பாடல்களையும் எழுதியுள்ளார்.  காப்பிராயன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.
மரணம் அடைந்தார்.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி அருகே வசித்து வந்த அண்ணாமலைக்கு இன்று(27.9.2016) இரவு 7 மணிக்கு திடீர் என்று நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டதால் கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி.’யில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற ஊரில் பிறந்த அண்ணாமலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பி.ஏ. தமிழ் இலக்கியமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியமும் படித்தவர்.  ஜூனியர் விகடனில் பணிபுரிந்து வந்தபோதே 2003-ல் கும்மாளம் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.
17 வருடங்கள் வரம் இருந்து வந்ததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.   அந்த குழந்தைக்காகத்தான் இனி என் வாழ்வு என்று சொல்லி வந்தார்.  காலத்தின் கோலம் அந்த வாழ்வு தொடராமல் போய்விட்டது.;அரும்பு, விருட்சம், ழ, தேன்மழை, அலைகள், தமிழோசை, தமிழமுது, இனிய உதயம், ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன், தினமலர், பொதிகை தென்றல் போன்ற இதழ்களில் 100க்கும் மேற்பட்ட இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.  தனித்தொகுதிப்பு கொண்டு வரவேண்டும் என்பது அண்ணாமலையின் நீண்ட நாள் கனவாக இருந்தது.  அது நிறைவேறாமலே போய்விட்டது.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: