புதன், 26 அக்டோபர், 2016

முதல்வர் இன்னும் கிரிட்டிகல் பொசிஷனை தண்டவில்லையா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ‘அவர் பேசுகிறார்; அவருடைய உணவை அவரே சாப்பிடுகிறார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்வது போல முன்னேற்றம் அல்ல. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மயக்க மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசமும் தொண்டையில் டியூப் போடப்பட்ட டிரைக்கியோடாமி சிகிச்சையும் இன்னும் தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி சில நிமிடங்கள் மட்டும் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டுள்ள வென்டிலேட்டரை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை. உடனே, மீண்டும் வென்டிலேட்டரை இணைத்துவிட்டார்கள். பொதுவாக நுரையீரல் நோய் வந்தால் அது குணமாக மாதக்கணக்கில் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து செப்டம்பர் இரண்டாவது வாரம் வரையில் குடும்ப டாக்டர்கள் சிலர் மூலம் உலக அளவில் பெஸ்ட்டான ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தாராம்.’’


‘‘தீபாவளிக்கு முன்பாக ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என சில செய்திகள் வருகின்றனவே?’’

‘‘அப்போலோ சொல்லும் சில தகவல்களை வைத்துப் பார்த்தாலே, அவர் எவ்வளவு கிரிட்டிகல் பொசிஷனில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். டஜன் கணக்கான சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வசதிகளை போயஸ் கார்டனில் வைத்து அளிக்க முடியாது. அதனால் தீபாவளிக்குள் கார்டன் திரும்புவது சாத்தியமில்லை என்றுதான் சொல்கிறார்கள்.’’

‘‘இரண்டாவது முறையாக அப்போலோ வந்த கவர்னர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தாரா?’’

‘‘கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலேயே ஜெயலலிதாவை பார்த்ததாக சொல்லவில்லையே. ‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு கவர்னர் சென்றார்’ என்றுதானே இருக்கிறது. இதுவரை யாரும், அவரைப் பார்க்கவில்லை. அதனால்தான், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி, இதுபற்றி கவர்னரிடம் ஒரு கடிதமே கொடுத்துள்ளார். அதில், ‘முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமரைக்கூட நேரில் சந்திக்க அவசியமில்லை. ஆனால், கவர்னர் கண்டிப்பாக நேரில் போய்ப் பார்க்க வேண்டும். அப்படி அவரைப் பார்க்கவிடாமல், தடுப்பது சட்டவிரோதம். எனவே, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க மெடிக்கல் போர்டுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத்தான், இரண்டாவது முறையாக அப்போலோவுக்கு விசிட் அடித்தாராம் கவர்னர் வித்தியாசாகர் ராவ். ஜெயலலிதாவைப் பார்த்தேன் என்றும் தெளிவாகச் சொல்லாமல், பார்க்கவில்லை என்றும் சொல்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எப்படியாவது ஜெயலலிதாவை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கவர்னர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக அப்போலோ வந்தார். முதல்முறை வந்தபோது என்ன காரணம் சொன்னார்களோ அதே காரணத்தைதான் இப்போதும் சொல்லி அவரை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் செய்துவிட்டார்கள். ‘தொற்று பிரச்னையால்தான் அனுமதிக்கப்பட்டிருகிறார். கிருமித் தொற்று பரவும் என்பதால் நீங்கள் பார்க்க வேண்டாம்’ என வித்யாசாகர் ராவிடம் அழுத்தி சொல்லியிருக்கிறார்கள். அப்போலோ சேர்மன் பிரதாப் சி. ரெட்டி கவர்னரிடம் மெடிக்கல் ரிப்போர்ட் பற்றி விளக்கி இருக்கிறார். கவர்னர் மாளிகை திரும்பிய வித்யாசாகர் ராவ் அப்போலோ நிலையைப் பற்றி விரிவாக மத்திய அரசுக்கு அனுப்பினாராம்.’’

‘‘ம்.’’

‘‘நன்றாக ஆகிவிட்டார்... எழுந்து உட்காருகிறார்... பேசுகிறார்... இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்று வந்த செய்திகளை உறுதிப்படுத்தவே கவர்னர் வந்தார். அந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அவரை ஏன் பார்க்கவிடாமல் செய்யவேண்டும்?’’ என்ற ரீதியில் மத்திய உளவுத்துறை நோட் போட்டுள்ளது.

‘‘அப்போலோ நிர்வாகத்தின் நிலைதான் பரிதாபம். மருத்துவத் துறையில் உள்ள அவர்களுடைய போட்டியாளர்கள் விமான நிலையத்தில் தனியாக ஆட்களை நியமித்து, வெளிநாட்டில் இருந்து மருத்துவச் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளிடம், அப்போலோவின் தற்போதைய நிலை, போலீஸ் கெடுபிடி என அனைத்தையும் விளக்கிச் சொல்லி அவர்களை தங்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அதனால், அப்போலோ மருத்துவமனையில் உள்ள ‘ஃபாரின் டெஸ்க்’ மிகவும் கவலையில் இருக்கிறதாம். இதை பிரதாப் ரெட்டியே, தமிழகத்தின் முக்கியமான அரசியல் வாரிசு ஒருவரிடம் சொல்லிப் புலம்பினாராம்.’’ விகடன்,காம்

கருத்துகள் இல்லை: