செவ்வாய், 18 அக்டோபர், 2016

அப்போலோவில் இருந்து முதல்வரை சிங்கபூருக்கு அனுப்ப மத்தியஅரசை நெருக்கிய பிரதாப் ரெட்டி

“டெல்லியிலிருந்து அமித் ஷாவும் அருண் ஜெட்லியும் அப்பல்லோவுக்கு வந்து போனார்கள் இல்லையா… அவர்கள் பிரதமரிடம், ‘ஜெயலலிதா உடல்நிலை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு வேண்டப்பட்ட சிலர் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்கள் பிரதமர் அலுவலகத்துடன் பேசியிருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருது. ஆனால் அவங்க இம்ப்ரூவ்மெண்ட் ஆக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது. சிங்கப்பூர்ல இருக்கும் மவுண்ட் எலிசபெத் ஹாஸ்பிட்டலுக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் டெவலப்மெண்ட் ஆக வாய்ப்பு இருக்கு. நாங்கள் சொன்னால் சரியாக இருக்காது. பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு கவர்மெண்ட் சைடுல பேசுங்க…’ என்று சொல்லியிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்திலிருந்தும் உடனே பேசியிருக்கிறார்கள். ‘இந்த கண்டிஷன்ல உடனே சிங்கப்பூர் ஹாஸ்பிட்டலுக்கு மாற்றினால் நல்லது. அதுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருக்குது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அப்படி பதில் வந்தால் முதல்வரை உடனடியாக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யுமாம்.” இது நேற்று சொன்னது. அப்போலோவின் பிரதாப் ரெட்டிக்காரு  பட்ற அவஸ்த்தை கொஞ்ச நஞ்சம் அல்ல
இன்றைக்கு அப்டேட்டை அடுத்த மெசேஜ்ல போடுறேன். இது அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று முடிந்தது முதல் மெசேஜ்.
‘ஓ.கே. ஐயாம் வெய்ட்டிங்…’ என்று கமெண்ட் அடித்தது.
சற்றுநேரத்தில் வந்தது அடுத்த மெசேஜ். “முதல்வர் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வத்துடன் இருக்கிறார் பிரதமர் மோடி. சில தினங்களுக்குமுன்பு சிங்கப்பூரிலிருந்து தலைமை பிசியோதெரபி பெண் மருத்துவர்கள் இருவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்கள் இல்லையா… அவர்கள் தொடர்ந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்களின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்களோ, ‘அவங்களை இங்கே சிகிச்சைக்கு அழைத்துவர வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் சசிகலாவிடம் இதுபற்றி டிஸ்கசன் செய்திருக்கிறார்கள். ‘மேடம்க்கு இங்கே கொடுக்கிற ட்ரீட்மெண்ட்டைவிட சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினா இன்னும் ரெக்கவரி ஸ்பீடா இருக்கும். அவங்களை சிங்கப்பூர் கொண்டுபோகும் வரை நாங்கள் பக்கத்திலிருந்து பார்த்துக்குறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசிகலா, ‘அக்காவுக்கு வெளிநாட்டுல போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறதுல விருப்பம் இல்லை. அதனால அதைப்பற்றி பேச வேண்டாம்’ என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். மன்னார்குடி உறவுகளிடம் இதுபற்றிப் பேசிய சசிகலா, ‘வெளிநாட்டுக்குப் போறதா இருந்தா அக்கா முன்னாடியே போயிருப்பாங்க. அவுங்க ஜாதகப்படி, வெளிநாட்டுக்குப் போறது சரியா இருக்காது என்று எல்லா ஜோதிடர்களுமே சொல்லிட்டாங்க. அதனால, அவங்களுக்கு அதுல கொஞ்சமும் விருப்பம் இல்ல. இப்போ அவங்களுக்கு முடியாம இருக்குற நேரத்துல நாம இப்படி ஒரு முடிவு எடுக்க முடியாது. எந்த ட்ரீட்மெண்ட்டாக இருந்தாலும் இங்க வெச்சே பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டாராம். அதனால், முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் உடன்பாடு இல்லை என்று, தமிழக அரசுத் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கும் தகவல் சொல்லிவிட்டார்களாம்” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: