சனி, 26 நவம்பர், 2016

9 ஏக்கரில் 50 கோடி செலவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ரா கட்டிய அரண்மனை.. வெளங்கிடும்?

தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ், குண்டு துளைக்காத அறைகளுடன் கூடிய வீட்டிற்கு இன்று காலை குடிபெயர்ந்துள்ளார். ஹைத்ராபாத் நகரில் பேகம்பேட் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். நக்சலைட்டுக்கள் அச்சுறுத்தல் இருப்பதால் குளியறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குண்டு துளைக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி உள்ள இந்த வீட்டில் 250 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் அமர்ந்து கலந்துரையாட பிரம்மாண்ட அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை சந்திரசேகரராவ் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
nakkeeran

கருத்துகள் இல்லை: