புதன், 30 நவம்பர், 2016

இனிமேல் இலங்கை வியாபாரம் நடக்காது, இட்லியம்மா பணியாரமும் வேகாது ..கோபாலசாமியின் கடைசி புகலிடம் மோடி?

பாவம்யா உன் கட்சிக்காரன் எந்த நேரத்துல நீ எந்த கலருக்கு மாறுவேன்னு தெரியாம தினருறான் , கருப்பு போடுறே, சிவப்பு போடுறே, காவியை கட்டுரே தலையில் பச்சை முண்டாசை வரிஞ்சி வரிஞ்சி கட்டுறே , திடீரென்று மோடியை கட்டிப்பிடிக்கிறே அடுத்தநாள் திட்டித்தீர்க்கிறே, விஜகாந்த்தை முதலமைச்சருன்னு சொல்லுறே அப்புறமா அந்தாளை முதலமைச்சருன்னு சொன்னதாலேதான் என்னுடைய இமேஜூ போச்சுன்னு கத்துறே கதறுரே,.... தர்மருன்னு சொன்னே , அர்ஜுனருன்னு சொன்னே கடைசியா சகுனி வேஷம் போட்டு எங்களை ஏன் சாகடிக்கிறே பாவம்யா நாங்க எங்களை விட்டு்டு
பாவம்யா உன் கட்சிக்காரன் எந்த நேரத்துல நீ எந்த கலருக்கு மாறுவேன்னு தெரியாம தினருறான் , கருப்பு போடுறே, சிவப்பு போடுறே, காவியை கட்டுரே தலையில் பச்சை முண்டாசை வரிஞ்சி வரிஞ்சி கட்டுறே , திடீரென்று மோடியை கட்டிப்பிடிக்கிறே அடுத்தநாள் திட்டித்தீர்க்கிறே, விஜகாந்த்தை முதலமைச்சருன்னு சொல்லுறே அப்புறமா அந்தாளை முதலமைச்சருன்னு சொன்னதாலேதான் என்னுடைய இமேஜூ போச்சுன்னு கத்துறே கதறுரே,.... தர்மருன்னு சொன்னே , அர்ஜுனருன்னு சொன்னே கடைசியா சகுனி வேஷம் போட்டு எங்களை ஏன் சாகடிக்கிறே பாவம்யா நாங்க எங்களை விட்டு்டு.
இப்ப எண்ணத்தை கண்டுட்டே மோடியை ஆதரிக்கிறே மோடிக்கும் ஊழலுக்கும் சம்மந்தமே இல்லையா , அப்ப எடியூரப்பாவும் 650 கோடியிலே கல்யாணம் பண்ணிய ஜனார்த்தன ரெட்டியும் உத்தமர்களா, நிதின் கட்காரியின் நிதி விளையாட்டைப்பற்றி நீ கேள்வியே பட்டதில்லையா ஐயோ சாமி முடியல,.. திடீரென்று நான் எக்கனாமிஸ்ட்டுன்னு ஒரு புது வேஷம் கட்டுறே என்ன இது புது கதை சட்டக்கல்லூரியில் எக்கனாமிஸ் பாடம் எடுக்கிறாங்களா அப்படின்னா இந்த லூசுத்தனமான பணம் செல்லாது என்றஅறிவிப்பு உனக்கு பெரிய பொருளாதாரா முடிவா தெரியுதா..
எங்க ஊர் பிரிண்டிங் பிரஸில்கூட பத்திரிகை அச்சடிக்கும்போது அதுக்கு தகுந்த கவரை வைத்து தருவார்கள் ஆனா இந்த அறிவாளி கூட்டம் பணம் அடிச்ச பின்னே அது ஏ.டி .எம்மில் வராதுன்னு சொல்லி கீழ்ப்பாக்கமா நின்னு சிரிக்கிறானுவ இவனுங்களின் திட்டத்துல தீய வைக்க... நீ ஏன் திடீரென்று மோடிக்கு காவடி தூக்கறேன்னு கடைசியா சொல்லுறேன்..
நேற்று ஒரே நாளில் ஒருத்தன் ''அருண்'' என்பவன் தொலைக்காட்சி செய்திகளிலும் , நாளிதழ்களிலும் பிரபலமானான் அவன் செஞ்ச காரியம் என்ன தெரியுமா புது நோட்டு சுமார் 20 லட்சத்தை கடத்திக்கொண்டுவந்ததுதான், சரி இதுமாதிரி பல இடங்களில் பணம் பிடிக்கப்பட்டுள்ளதே இதில் என்ன விசேஷம்னு என்று நினைக்கலாம் இதில் என்ன விசேஷம் என்றால் அண்ணன் பிஜேபியின் முக்கிய நிர்வாகி சரி அதுக்கென்ன எல்லாக்கட்சியிலும் இதுபோல அங்கொன்றும் இங்கொற்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று சொல்லலாம், ஆனால் அன்னன் என்ன செஞ்சாரு தெரியுமா சுமார் 20 நாட்களாக அதாவது மோடி 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதல் முகநூலில் மோடிக்கு கடுமையான ஆதரவையும், இந்த நாட்டுக்காக நீங்க இத பொருத்துக்கக்கூடாதா என்ற பொன்மொழியையும், சும்மா கலர் கலரா அள்ளி அள்ளி விட்டிருக்காரு இப்ப அன்னன் அரெஸ்ட் இது மாதிரி மோடிக்கு காவடி தூக்கிறவன் எல்லோரும் பெரும் புள்ளி கரும்புள்ளியாகவே இருக்கிறான் ..இப்ப என்னடான்னா கோவாலு வாண்டா வந்துவண்டியிலே ஏறுது , வைகோ மோடிக்கு சப்போர்ட்டுன்னு தெரிஞ்ச உடனேயே ம.ந.கூ வைகோவை கேனகூ என்று சிவப்பு துண்டையும் ஊதா துண்டையும் காட்டி காரி துப்புறானுவ..
போங்க சாமி , இனிமேலும் நீங்க விடுற கதையை உங்க வீட்டுலகூட நம்ப மாட்டாங்க. தமிழருவி பணியன்னு ஒன்னு காணாமல் போச்சு அந்த லிஸ்டுல சேரணுமா நெடுமாறமா நின்னு நாரணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க இனிமேல் இலங்கை வியாபாரம் நடக்காது, இட்லியம்மா பணியாரமும் வேகாது , போற வழிக்கு புண்ணியம் தேட கோபாலபுரசாமிகிட்டே போய் அர்ச்சனை தட்டோடு நில்லுங்க, ஆண்டவன் அருள் புரிவான்...  முகநூல் பதிவு  Mja Mayiladuthurai ********** **

கருத்துகள் இல்லை: