செவ்வாய், 29 நவம்பர், 2016

கட்டம் கட்டப்பட்டவர்கள் அப்போலோவுக்கு அடிக்கடி வருகை .. அப்படீன்னா ? பூரண நினைவாற்றல் அம்மாவுக்கு இல்லையா?

சசிகலா, அவரது கணவர் ம.நடராஜன், சசியின் சகோதரர் திவாகரன், நடராஜனின் சகோதரர்கள் ராமச் சந்திரன், பழனிவேல் மற்றும் அவரது உற வினர்கள் டி.டி.வி. தின கரன், பாஸ்கரன், சுதா கரன், டாக்டர் எஸ்.வெங்க டேஷ், ராவணன், மிடாஸ் மோகன், குலோத் துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், சுந்தர வதனம், சந்தானலட்சுமி, வைஜெயந்திமாலா (நடராஜனின் சகோதரி) இந்தப் பட்டியலை அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் மறக்கவில்லை. தனக்கு எதிராக சதி செய்த தாக 2011, டிசம்பர் 19-ந் தேதி அ.தி.மு.க.விலிருந்து இவர்களை அதிரடியாக நீக்கினார் ஜெ. இவர்களுடன் கழகத்தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டார் ஜெயலலிதா.
மூன்று மாதம் கடந்த பிறகு, ஜெ.வுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான உறவைத் துண்டித்துவிட்டதாக சசிகலா மன்னிப்பு அறிக்கை வெளியிட... இதன்பின் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை மட்டும் ரத்து செய்யப் படுவதாகவும் மற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதனையடுத்தே, சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் மட்டும் கார்டனுக்குள் மீண்டும் திரும்பினர்.


ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படாதவர்களின் துரோகத்தை அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டாகும் வரையில் மன்னிக்கவில்லை.

ஜெயலலிதாவால் துரோகிகள் என அடையாளம் காணப்பட்டு கட்சி யிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் பல பேர் கடந்த 60 நாட் களாக ஜெ. அட்மிட்டாகியுள்ள அப்பல்லோவுக்கு வருவதும் அவர்களோடு சசிகலா விவாதிப்பதும் ஆலோசிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக் கிறது. குறிப்பாக, நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், டி.டி.வி.தினகரன், சுதா கரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், ராவணன் உள்ளிட்ட பலரும் வந்து போகிறார்கள். இவர்களில் சிலர் அப்பல்லோவிலேயே தங்கிக்கொள்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தவர்களோடு சசிகலா நட்பு பாராட்டுவதும் அவர்களை அரவணைப்பதும் ஜெயலலிதாவுக்கு அவர் செய்யும் துரோகம். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'' என்கிறார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் இன்னமும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யாகவே நீடிக்கும் சசிகலா புஷ்பா. இதே மனக்குமுறல் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரிடமும் இருக்கிறது.

அவர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் கள் மட்டுமல்ல, சசிகலாவின் ஒட்டுமொத்த உறவுகளும் அப்பல்லோவில்தான் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்கள் நடமாட்டம்தான் சசிகலாவை சுற்றி நடந்துவருகிறது. நடராஜன் மற்றும் திவாகரன் இருவரும் மருத்துவமனைக்கு வரவில்லை எனினும் அவர்களின் ஆலோசனைபடிதான் நடந்துகொள்கிறார் சசிகலா.

இளவரசியின் மகன் விவேக்கிற்கு, ஜெயலலிதாவிடம் செல்வாக்கு இருந்தது. அண்மைக்காலத்தில் அந்தப் பையனையும் புறக்கணித்துவிட்டார் ஜெயலலிதா. அவரும் இப்போது மருத்துவமனையில் வலம்வரு கிறார்.

திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் முக்கியத்துவம் பெற்றிருக் கிறார். முன்பு அதிகார மையமாக இயங்கிய தேசபந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். அவர் தற்போது நடராஜனின் வலதுகரமாக இயங்குகிறார். அவருடைய வருகையும் மருத்துவமனையில் தென் படுவதுடன் அவரது ஆதிக்கமும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.

இதுதவிர, நடராசனின் தம்பி ராமச்சந்திரன் மகன் மருது, சசிகலா உறவினர் ராவணன் ஆகியோ ரும் ஏக மரியாதையோடு வளைய வருகின்றனர். ஆக, ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்டவர்கள் அனைவரும் சசிகலாவை சூழ்ந்திருப்பதும் அவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப் படுவதும் தடையின்றி நடக்கிறது'' என்று ஆதங் கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. தரப்பில் மேலும் நாம் விசாரித்தபோது, "  சசிகலா, அவரது கணவர் ம.நடராஜன், சசியின் சகோதரர் திவாகரன், நடராஜனின் சகோதரர்கள் ராமச் சந்திரன், பழனிவேல் மற்றும் அவரது உற வினர்கள் டி.டி.வி. தின கரன், பாஸ்கரன், சுதா கரன், டாக்டர் எஸ்.வெங்க டேஷ், ராவணன், மிடாஸ் மோகன், குலோத் துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், சுந்தர வதனம், சந்தானலட்சுமி, வைஜெயந்திமாலா (நடராஜனின் சகோதரி) இந்தப் பட்டியலை அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் மறக்கவில்லை. தனக்கு எதிராக சதி செய்த தாக 2011, டிசம்பர் 19-ந் தேதி அ.தி.மு.க.விலிருந்து இவர்களை அதிரடியாக நீக்கினார் ஜெ. இவர்களுடன் கழகத்தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டார் ஜெயலலிதா.;மூன்று மாதம் கடந்த பிறகு,  ஜெ.வுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான உறவைத் துண்டித்துவிட்டதாக சசிகலா மன்னிப்பு அறிக்கை வெளியிட... இதன்பின் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை மட்டும் ரத்து செய்யப் படுவதாகவும் மற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதனையடுத்தே, சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் மட்டும் கார்டனுக்குள் மீண்டும் திரும்பினர்.ஒழுங்கு நடவடிக்கை ரத்து  செய்யப்படாதவர்களின் துரோகத்தை அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டாகும் வரையில் மன்னிக்கவில்லை.
;ஜெயலலிதாவால் துரோகிகள் என அடையாளம் காணப்பட்டு கட்சி யிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் பல பேர் கடந்த 60 நாட் களாக ஜெ. அட்மிட்டாகியுள்ள அப்பல்லோவுக்கு வருவதும் அவர்களோடு சசிகலா விவாதிப்பதும் ஆலோசிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக் கிறது. குறிப்பாக, நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், டி.டி.வி.தினகரன், சுதா கரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், ராவணன் உள்ளிட்ட பலரும் வந்து போகிறார்கள். இவர்களில் சிலர் அப்பல்லோவிலேயே தங்கிக்கொள்கிறார்கள். <""ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தவர்களோடு சசிகலா நட்பு பாராட்டுவதும் அவர்களை அரவணைப்பதும் ஜெயலலிதாவுக்கு அவர் செய்யும் துரோகம். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'' என்கிறார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் இன்னமும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யாகவே நீடிக்கும் சசிகலா புஷ்பா.&n>இதே மனக்குமுறல் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரிடமும் இருக்கிறது. அவர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் கள் மட்டுமல்ல, சசிகலாவின் ஒட்டுமொத்த உறவுகளும் அப்பல்லோவில்தான் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்கள் நடமாட்டம்தான் சசிகலாவை சுற்றி நடந்துவருகிறது. நடராஜன் மற்றும் திவாகரன் இருவரும் மருத்துவமனைக்கு வரவில்லை எனினும் அவர்களின் ஆலோசனைபடிதான் நடந்துகொள்கிறார் சசிகலா. இளவரசியின் மகன் விவேக்கிற்கு, ஜெயலலிதாவிடம் செல்வாக்கு இருந்தது. அண்மைக்காலத்தில் அந்தப் பையனையும் புறக்கணித்துவிட்டார் ஜெயலலிதா. அவரும் இப்போது மருத்துவமனையில் வலம்வரு கிறார். திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் முக்கியத்துவம் பெற்றிருக் கிறார்.  முன்பு அதிகார மையமாக இயங்கிய தேசபந்து ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். அவர் தற்போது நடராஜனின் வலதுகரமாக இயங்குகிறார். அவருடைய வருகையும் மருத்துவமனையில் தென் படுவதுடன் அவரது ஆதிக்கமும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.

; கடந்த 18ஆம் தேதி சசிகலாவின் சின்னம்மா குணர்பூசணி அம்மாள் சென்னை தி.நகரில் காலமானார். அதற்காக துக்கம் விசா ரிக்க சென்ற சசிகலா, அப்படியே தீபாவையும் சந்தித்து சமாதானப்படுத்தியிருக்கிறார்'' என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க.வில் இருக்கும் மன்னார்குடி தரப்பினர். சசிகலா சந்திப்பு குறித்து தீபாவிடம் நாம் கேட்டபோது, ""எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அந்த வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். என்னை யாரும் சந்திக்கவில்லை'' என்கிறார். <இந்தநிலையில், ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனைபடி பார்த்தசாரதி கோயில் உட்பட பல கோயில்களுக்கும் நள்ளிரவிற்குப் பிறகு சென்று பூஜைகளில் கலந்துகொண்டு அப்பல்லோ திரும்புகிறார் சசிகலா. விகடன்,காம்

கருத்துகள் இல்லை: