திங்கள், 5 டிசம்பர், 2016

144 தடை உத்தரவு எந்நேரமும் பிறப்பிக்கப்படலாம் .. அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு

முதல்வரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி தலைமையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்தியமூர்த்தி மற்றும் சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது. மேலும் தமிழக காவல்த்துறையினர் அனைவரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணிக்கு வரவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனைத்து காவலர்களும் காலை 7 மணிக்கு சீருடையும் பணிக்கு வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை தலைவர்  திரிபாதி தலைமையில் சென்னையில் காவல்துறை உயரதி ஆலோசனை நடைபெற்றது. இதில் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி மற்றும் சென்னை கமிஷனர் உள்பட அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து  மாவட்ட எஸ்.பி.க்கள், காவல்துறை ஆணையர்கள், குற்றப்பிரிவு போலீஸ் உள்பட அனைவரும் தங்களின் வாகனங்களுடன் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி  ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் அனைவரும் விடுமுறையின்றி பணிக்கு வரவேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு பணியில் தொடர்ந்து  ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளார்.taminfo

கருத்துகள் இல்லை: