திங்கள், 5 டிசம்பர், 2016

75 நாட்களாக மர்மமாகவே இருக்கும் ஒரு நிகழ்வில், எல்லாம்மே மர்மமாக தோன்றுவது இயல்புதானே.

சில சம்பவங்களை கோர்வையாக பார்த்தால் மர்மமாக உள்ளது...
ஏற்கனவே OPS கும்பலை, அன்புநாதன் வழக்குகளை காண்பித்து பிஜேபி வழிக்கு கொண்டு வந்துவிட்டது...
பிடிகொடுக்காமல் இருந்த சசிகலா & எடப்பாடி பழனிச்சாமி அணியானது, புதிதாய் பெங்களூருவில் பிடிபட்ட "கருப்பு பண" விவகாரத்தில் மாட்டியது, பிஜேபிக்கு தோதாகிவிட்டது.. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் வேறு வாய்ப்பில்லை..
திடீரென பிரபல RSS மத்தியஸ்தர் "சோ" ராமசாமி அதே அப்பலோவில் "சேர்ந்தது"...
அங்கே நடத்தப்பட்ட சில பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு, "செட்டில்மென்ட்" முடிவு செய்யப்பட்டிருக்கலாம்....
அதிமுக MLAக்கள் கூட்டம் கூட, அப்பல்லோவில் நடக்க காரணம் என்ன?? சோ அங்கே இருப்பதாலா??
75 நாட்களுக்கு மேலாக நீண்டதை, செட்டில்மென்ட் ஆகியவுடன், முடிவுக்கு கொண்டுவர, "பல நாட்கள் முன்பே" பிரிண்ட் செய்யப்பட்ட அறிக்கையில், பேனாவால் தேதியை மட்டும் எழுதி வெளியிடப்பட்டிருகலாம்... இது புதிதல்ல, ரூபாய் நோட்டு தடையையும் பல நாட்களுக்கு முன்பே பேசி ரெகார்ட் செய்யப்பட்டதை, நவம்பர் 8 அன்று "லைவ்" நேரலையில் பேசியதை போல ஒளிப்பரப்பியவர்கள் தானே...
ஏங்க, இப்படி எல்லதையும்மே சந்தேகத்தோடு பார்த்தால் எப்படி????
அதுசரி, கடந்த 75 நாட்களாக மர்மமாகவே இருக்கும் ஒரு நிகழ்வில், எல்லாம்மே மர்மமாக தோன்றுவது இயல்புதானே. முகநூல் பதிவு பிரகாஷ் ஜே

கருத்துகள் இல்லை: