திங்கள், 5 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் .. அப்போலோ அதிகார பூர்வ அறிவிப்பு! சங்கீதா ரெட்டி டுவீட்!

நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சிறப்பு வார்டில் இருந்து மீண்டும் திவீர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா. அங்கு அவருக்கு இதயத்துடிப்பை சீராக்கும் நவீன மருத்துவக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் அவசர அழைப்பு விடப்பட்டு அவர்களும் சென்னை விரைந்து விட்டார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவக்குழுவினர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்கள். அவருடன் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை செய்து அவர் வழங்கிய ஆலோசனையின் படியும் சிகிச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “முதல்வரின் இதயத்துடிப்பை சீராக்கும் முயற்சியாக அவருக்கு extracorporeal membrane heart assist device மூலம் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


(எக்ஸ்ட்ரா கார்போரியல் உயிர்காக்கும் சிகிச்சை)
இந்த முறை சிகிச்சை என்பது மாரடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு ரத்தம் செல்வது தடை படும் நிலையில் உடலுக்கு வெளியே எக்ஸ்ட்ரா கார்போரியல் என்னும் இயந்திரத்தை இதயத்தோடு பொருத்தி இதயத்துடிப்பை சீராக்க முயல்வார்கள். அந்த சிகிச்சைதான் நள்ளிரவையும் கடந்து முதல்வருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டியின் மகள் சங்கிதா ரெட்டி 10.47 மணிக்கு செய்துள்ள டுவிட்டில் “முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிசிச்சையளித்து வருகிறார்கள். கடவுளின் ஆசி அவருக்கு கிடைக்கட்டும்” என்று டுவிட் செய்துள்ளார். minnambalam.com

கருத்துகள் இல்லை: