திங்கள், 5 டிசம்பர், 2016

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் முதல்வர் பதவிக்கு போட்டி .. விவகாரம் சந்தைக்கு வந்து விட்டது

இன்று நமது மின்னம்பலம் மின்னிதழில், எடப்பாடியை முதல்வராக்குவது தொடர்பாக திவாகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடலை வைத்து ‘முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி?’ .minnambalam.com/k/1480876247 என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த முடிவு இறுதி வடிவத்தை எட்டியிருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபின்னர் அவருடைய பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டன. அமைச்சரவையையும் அவரே வழிநடத்திச் சென்ற நிலையில் நேற்று இரவு, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், இன்று காலை அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் அப்பல்லோவில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வத்தையே முதல்வராக்க வேண்டும் என்று சத்தமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால் ‘சின்னம்மாவின் முடிவு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதே!’ என்று சில முக்கியஸ்தர்கள் சொல்ல, அந்த இடத்தில் அமைதியாகக் கலைந்திருக்கிறார்கள்.minnambalam.com

கருத்துகள் இல்லை: