ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பிரதமர் மோ(ச)டி பிச்சைக்காரர்கள்: ‘ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரும் ரொக்க பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க அவர் ‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “இது எத்தனை தூரத்துக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பிச்சைக்காரனிடம் ஒருவர், ‘உனக்கு உதவத்தாம்பா எனக்கும் விருப்பம். ஆனால், என்கிட்ட சில்லறை இல்லியே?’ என்கிறார். அதற்கு அந்த பிச்சைக்காரர், ‘ஐயா, கவலையே படாதீங்க’ என்று சொல்லி, ‘ஸ்வைப் மெஷின்’ ஒன்றை அவரிடம் நீட்டி, ‘டெபிட் கார்டை கொடுங்க’ என்று கேட்கிறார்’’ என்று கூறினார். இதை கேட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர்minnambalam.com

கருத்துகள் இல்லை: