ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு - கிராமிய ,கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான விளையாட்டு...

ஒருத்தன் கூட மறந்தும் இது ஒரு கிராமிய ,
கோயில்  திருவிழாவின் ஒரு பகுதியான விளையாட்டு என்பதை குறிப்பிடுவதே இல்லை… திரும்பத் திரும்ப நாட்டு மாடு பாதுகாப்பு….  இல்லைன்னா தமிழனின் வீர விளையாட்டு…
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தென்பகுதியில் , குறிப்பாக மதுரைக்கு தெற்கே உள்ள கிராமங்களில் மட்டும் நடத்தப்படும் விளையாட்டு…. எனில் மதுரையை ஒட்டி உள்ளவர்கள் மட்டும்தான் தமிழர்களா? தமிழகத்தின்  பிறபகுதிகளில் வசிப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? உண்மை என்னவென்றால் , இவையெல்லாம் தமிழர்களின் இறைவழிபாட்டை ஒட்டிய நிகழ்வுகள்… சில இடங்களில் ஜல்லிக்கட்டு , சில இடங்களில் மஞ்சு விரட்டு ….கொங்குப்பகுதியில் ரேக்ளா ரேஸ்மற்றும் மாட்டுத்தாவணி…இவை எல்லாவற்றுக்குமே உள்ள ஒற்றுமை என்னவென்றால் , இந்த நிகழ்வுகள் எல்லாமே தமிழ் ஹிந்துக்களின் கோயில் வழிபாட்டை ஒட்டி நடத்தப்படுபவை…

கொங்குப்பகுதியில் முன்பெல்லாம் ஊருக்கு ஊர் மாட்டுத்தாவணி [ மாட்டுச்சந்தை ] நடக்கும்….எல்லாமே அந்தந்த ஊர் கோயில் திருவிழாக்களை ஒட்டி மட்டுமே நடக்கும்… இதன் தாத்பர்யம் என்னவென்றால் , கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு , வரும்போது அப்படியே மாடு வாங்கி வருவது….அப்படி கோயில் மாட்டுத்தாவணியில் மாடு வாங்கினால் , செல்வம் பெருகும் என்பது  மக்களின் நம்பிக்கை…
இன்று அவை எல்லாம் வழக்கொழிந்து போய் காங்கயம் அருகே உள்ள கண்ணபுரம் [ மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ]  மாட்டுத்தாவணியும்  , அந்தியூர் குருநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை  ஒட்டி நடத்தப்படும் குதிரைச்சந்தையும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன…
ஜல்லிக்கட்டும் அந்தந்த ஊர் கோயில் கோயில் திருவிழாக்களை ஒட்டித்தான் நடத்தப்படுகிறது…வாடிவாசலில் முதலில் அவிழ்த்துவிடப்படுவது கோயில் காளைதான்… அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்….
தமிழன் ஹிந்து அல்ல …என்று எப்படியாவது ஸ்தாபித்துவிட நீண்டகாலமாக நடைபெறும் முயற்சியின் ஒருபகுதிதான் இந்த சமத்துவப்பொங்கல் , நாட்டு மாட்டை காப்பதற்காக [ மட்டுமே ] நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சாரங்கள்… தமிழன் வேண்டும்…ஆனால் அவனின் மத [ ஹிந்து ] அடையாளம் மட்டும் வேண்டாம்….இப்போது ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகவேண்டும் என்று  தூண்டிவிடுபவர்களில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு உள்ளூர ஜல்லிகட்டு நடக்கூடாது என்ற எண்ணம்தான் இருக்கும்…அப்போதுதானே இதை ஒரு சாக்காக வைத்து தமிழர்களை இந்திய தேசியத்துக்கு எதிராக திருப்ப முடியும்?
இப்படியே  நாட்டுமாடு பாதுகாப்பு  , தமிழன் வீரம் என்று மட்டும்ஜல்லியடித்துக்கொண்டிருந்தால் , இன்னும் நூறு ஆண்டானாலும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியாது…. இது எங்கள் வழிபாட்டின் ஒரு பகுதி…எங்கள் கிராம தேவதைக்கு நேர்ந்துகொண்டு நடத்தப்படும் நிகழ்வு…எங்கள் மத நம்பிக்கையில் தலையிட எந்த சட்டத்திற்கும் அருகதை இல்லை என்ற நிலையை நாம் எடுக்கவேண்டும்…அப்படி நாம் உறுதியாக நின்றால் , எந்த நீதிமன்றத்தையும் கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை…ஜல்லிக்கட்டு வழக்கின் இறுதிக்கட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சுப்ரமணிய சுவாமி , இந்த ரீதியில்தான் தன் வாதத்தை முன்வைத்திருக்கிறார்…
அப்படி இல்லாமல் இந்த வெற்றுத்தமிழ் கோஷங்களையே நாம் எதிரொலித்துக்கொண்டிருந்தால் , காலம் முழுக்க கரடியாக கத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்…காரியம் நடக்காது…..  தமிழனின் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் நம்மோடு நின்று கொண்டு , நம் கண்ணையே குத்திக்கொண்டிருப்பவர்களின் உண்மையான நோக்கமும் அதுதான்….  லைவ்டே

கருத்துகள் இல்லை: