ஞாயிறு, 15 ஜனவரி, 2017

சபரிமலையில் மகரஜோதி! பக்தர்கள் பரவசம்... உல்ட்டா விளக்கு பார்க்க ... கூட்டம்


2011 ஹை கோர்ட்டில் தேவஸ்தானம் போர்டு, மேலே காண்பிப்பது செயற்கை தீபம் தான் என்று கூறியது. ஆனாலும் அதை நம்பாமல். மகர நட்சத்திரம் என்று நினைத்தால் நம்மை என்ன என்று கூறுவது
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர். கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 6.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு 7 மணிக்கு உஷபூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. 7.40-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மகரசங்கரம பூஜையை நடத்தினார். எட்டு மணிக்கு மீண்டும் நெய்யபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது.


பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும்
தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.30 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6. 40க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில விநாடிகளில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.

ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ஆயிரம் பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.  தினமலர்

கருத்துகள் இல்லை: