திங்கள், 9 ஜனவரி, 2017

தைப்பொங்கலுக்கு இனி மத்தியரசு விடுமுறை கிடையாது ! பாஜகவின் அடுத்து பண்பாட்டு தாக்குதல்


பொங்கல் தினத்தை விருப்பவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்ததை பொதுவிடுமுறையாக மீண்டும் மாற்றுமாறு மத்திய அரசுக்கு சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திரசிங்குக்கு அனுப்பிய கடித விவரம்:
தமிழகத்திற்கு மிக முக்கியமான பண்டிகை,பொங்கல். மத்திய அரசின் 2017ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக விருப்ப விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகாறும் பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாகவே அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டில் பொங்கல் தினம் சனிக்கிழமையில் வந்தாலும் அஞ்சலகங்கள், பாதுகாப்புத்துறையின் அலுவலகங்கள், மத்திய சுகாதாரத் துறை திட்ட அலுவலகங்கள் போன்ற மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்குவதை தாங்கள் அறிவீர்கள். தமிழக மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழக மக்களின் மிக முக்கியமான திருநாளாகும். எனவே பொங்கல் தினத்தை தமிழகத்தில் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று தன் கடிதத்தில் ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: