புதன், 11 ஜனவரி, 2017

டிஜிட்டல் பொருளாதார நாடாக மாறும் இந்தியா! முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பெருமிதம்

காந்திநகர்:''உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக,இந்தியா மாறி வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்கு நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த, 2003ல் துவக்கப்பட்ட,இந்த மாநாடு, இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.அதன், 8வது முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. பிரபல நோபல் பரிசு பெற்றவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் துறை யினர், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை, நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த குஜராத், தொழில்களுக்கான மாநிலமாகவும் விளங்கு கிறது.    நீங்க சும்மா இருந்தாலே பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் . நீங்க அதை அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டு , அனைத்து பணமும் வங்கியில் வந்ததால், இந்த திட்டத்தின் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் , நீங்கள் வைத்த ஆப்பை நீங்களே எடுக்க கடின முயற்சி செய்கிறீர்கள்.இந்திய பொருளாதாரத்தை பற்றிய துளி புரிதல் இல்லாத ஆட்சியாளர்களால் இன்று நாடே சீர்குலைந்துள்ளது. மக்கள் பணத்தை வங்கியில் வைத்துக்கொண்டு, செலவு செய்ய விடாமல் செய்து, குருமூர்த்தி போன்ற ஆட்கள் அதை அரசுக்கு வந்த வருமானம் என்று உளறுவதும் பிஜேபியின் அறியாமையை தெளிவாக காட்டுகிறது...
இந்த மாநாட்டுக்கான ஆதரவு, வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்
தால், மிகவும் விரைவான முடிவுகளை எடுக்க முடியாது, சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியாது என்ற வாதத்தை உடைத்தெறிந்துள்ளோம்.
கடந்த,இரண்டரை ஆண்டுகளில், இந்த அரசின் செயல்பாடுகளால், முதலீடு செய்வதற்கு,அன்னிய நிறுவனங்கள் அதிகளவில் வரத்துவங்கி யுள்ளன. இது ஒரு துவக்கம் தான்.
இங்கு தொழில் துவங்குவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. உலகளவிலான மிகப் பெரிய உற்பத்தி நாடுகளில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும்ஆராய்ச்சிக்கான களமாகவும் விளங்குகிறது. பல் வேறு வகையான தரப் பட்டியல்களில், பின் தங்கி யிருந்த நிலையில் இருந்து, படிப்படியாக உயர்ந்து வருகிறோம்.

உலக பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு, 12.4 சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி., எனப் படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உட்பட, பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், இங்கு தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும், மிகப் பெரிய வாய்ப்பை அளிக்கிறது.

உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக, இந்தியாவை உயர்த்துவதற்கான முயற்சி கள் நடந்து வருகின்றன. மிகப் பெரிய இளைஞர் சக்தியை கொண்டுள்ளது என, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இங்கு உள்ளது.

அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும், 10 நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறோம். மிகச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற போட்டியும், இங்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தாயுடன் சந்திப்பு மோடி நெகிழ்ச்சி

முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அது தொடர் புடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற் காக, நேற்று முன்தினம், காந்தி நகருக்கு மோடி வந்தார். நேற்று காலையில், காந்தி நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில், தன் இளைய சகோதரருடன் வசிக்கும், 97 வயதான தன் தாய், ஹீராபாயை சந்தித்து, காலை உணவு சாப்பிட்டார், பிரதமர் மோடி. இது குறித்து, 'டுவிட்டர்' சமூகதளத்தில் நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார். தாயை சந்திப்பதற்காக, வழக்கமாக காலையில் செய் யும் யோகா பயிற்சியை தவிர்த்ததாக, அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
உலகத் தலைவர்களுடன் சந்திப்பு

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி, தனித் தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.ருவாண்டா அதிபர் பால் கோகாமே, செர்பிய பிரதமர் அலெக்ஸாண்டர் வூசிக், ஜப்பானின் பொருளாதார அமைச்சர் சேகே ஹிரோசிகே, டென்மார்க் மின்துறை அமைச்சர் லீர்ஸ் கிளிலேஹோல்ட் உள்ளிட் டோரை சந்தித்து பேசினார் மோடி.

இந்த மாநாட்டில், 20 நாடுகளைச் சேர்ந்த அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: