வியாழன், 16 பிப்ரவரி, 2017

தினமணி வைத்தி- புதிய தலைமுறை மாலன் : போயஸ் பூசாரிகள் அன்றும் இன்றும்

குன்ஹா தீர்ப்பு பிழை என்று அன்றே கூறியதாக மார் தட்டும் மாலன் இன்று என்ன கூறியிருக்கிறார்? அன்று போல பதிவுகளை தொடர்ச்சியாக மட்டுமல்ல நேற்று முழுவதும் ஒன்று கூட போடவில்லை.
அன்று ஜெயா சசி கும்பலின் சொத்துத் திருட்டு வழக்கில்   தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க அடிமைகள் சாலைகளில் குத்தாட்டம் போட்டனர். ஊடக அடிமைகளோ தலையங்கங்களில் எழுத்தாட்டம் போட்டனர். அதில் தினமணியின் வைத்தி முதன்மையானவர். அன்று அவர் எழுதிய தலையங்கத்தின் (12-05-2015) இறுதியில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.
//இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29-09-2014-ல் வெளியான “தினமணி’ தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
“ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும் தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை” என்பது தான் அது.

இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!”//
தினமணி (மே 5, 2015 தலையங்கம்):
இன்று தினமணி வைத்தியின் தலையங்கம் “சட்டம் கடமையைச் செய்யட்டும்!” அதிலிருந்து சில மேற்கோள்கள்:
இன்று,
//நாட்டில் ஊழல் மேலிருந்து அடிமட்டம் வரை புரையோடிப் போய்விட்டிருக்கிறது என்றும், சட்டம் பண பலம் படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் எதுவும் செய்து விடாது என்றும் பரவலாகப் பேசப்பட்டாலும், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே ஜெயலலிதாவே தண்டிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார் என்பதும், இப்போது மேல்முறையீட்டிலும், உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகள்.
ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் செயல்படுத்தாமல் விட்டு, ஏனைய மூன்று குற்றவாளிகளான வி.கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய மூவரும் எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத் தான் இருக்கிறது. இப்படியொரு அவமானத்தை எதிர்கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லது தான் என்று கூறத் தோன்றுகிறது.//
தினமணி ( பிப் 15, 2017):
பரவாயில்லை தினமணி வைத்தியாவது உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும், விசுவாசம் காரணமாக ஜெயாவின் சிறை வாசம் போகும் அதிர்ஷடம் அவரது மரணம் காரணமாக மறைந்து விட்டது என்று மனதுக்குள் ஆர்ப்பரிக்கிறார்.
வைத்தி – தினமணியின் ஆசிரியர், போயஸ் தோட்டத்தின் ஆஸ்தானப் பூசாரி!
புதிய தலைமுறை மாலன் – போயஸ் தோட்டத்து ஊடக பூசாரி

புதிய தலைமுறை மாலன்
குமாரசாமி தீர்ப்பு வந்ததும் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் வாடி என் ராசாத்தி பாட்டைப்போட்டு கொண்டாடியவர் மாலன். அன்று முழுவதும் அவர் ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அடுத்த நாளும் அவரது கொண்டாட்டம் தொடர்ந்தது. அதில் ஒன்று கீழே:
மாலன் நாராயணன் may 12 2015 , 9:23am
குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:
இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக் கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.
திருமண செலவு:
சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்தச் செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஆதாரங்கள் இல்லை
சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.
நன்றி: இன்றைய தினத்தந்தி
குன்ஹா தீர்ப்பு வெளியான போதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாலன் (மே 13 2015):
இன்று……
குன்ஹா தீர்ப்பு பிழை என்று அன்றே கூறியதாக மார் தட்டும் மாலன் இன்று என்ன கூறியிருக்கிறார்? அன்று போல பதிவுகளை தொடர்ச்சியாக மட்டுமல்ல நேற்று முழுவதும் ஒன்று கூட போடவில்லை. இன்று காலையில் ஒன்று மட்டும் வெளியிட்டுள்ளார். அதுவும் ஆங்கிலத்தில்…..
Very many discussions are on FB about the verdict of Jaya’s DA case. But most of them are on the political implications and legal processes. The verdict has a social dimension, which is discussed by Justice Amitava Roy in the supplement
What ought to have been discussed, apart from political and legal fall outs is this supplement ( A brilliant one, though not unfamiliar view. I wish somebody translates into Tamil and publish in FB or elese where. Dinamani? Hindu Tamil?)
Justice Roy says ” the militant dominance of this sprawling evil, that majority of the sensible, rational and discreet constituents of the society imbued with moral values and groomed with disciplinal ethos find themselves in minority, besides estranged and resigned by practical compulsions and are left dejected and disillusioned. A collective, committed and courageous turnaround is thus the present day imperative to free the civil order from the suffocative throttle of this deadly affliction”
Has Tamilnadu finally arrived at this “present day imperative”?
ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிகம் பேர் இந்த தீர்ப்பின் அரசியல் பாதிப்பு குறித்தும், சட்ட நடைமுறை குறித்து மட்டுமே பேசுவது குறித்து வருந்துகிறார் மாலன். என்ன இருந்தாலும் அறிஞர் அல்லவா? தீர்ப்பு இணைப்பில் நீதிபதி அமித்தவா பேசியிருக்கும் கருத்தின் சமூக பரிமாணங்கள் குறித்து பேசுவோம் என்று அதை  தி இந்துவோ இல்லை தினமணியோ மொழிபெயர்க்க வேண்டுமென்று கோருகிறார். சுருங்கச் சொன்னால் நீதிபதியின் கருத்தை “ ஊழல் பிசாசுவின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுதலை செய்ய வேண்டும்” என்று பொருள் கொள்ளலாம்.
அப்படி எனில் பச்சமுத்துவின் அவைப் புலவர் மாலன் போன்ற அறங்கொன்ற அறிஞர்களிடமிருந்து தமிழகம் விடுதலை பெற வேண்டுமே?

கைதி எண் 10711 சில குறிப்புக்கள்:

சசிகலா நடராஜன்
ரப்பன அக்ரகாரா சிறையில் சின்னம்மாவுக்கு கைதி எண் 10711-ம், இளவரசிக்கு கைதி எண் 10712-ம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் எண்ணைக் கூட்டினால் இறுதியில் 1 வருகிறது. அவரது ராசியான எண் என்ன என்று தெரியவில்லை. இருவரும் பெண் கைதிகளின் பிரிவில் பொது சிறையிலேயே அடைக்கப்படுகிறார்கள். மூன்று சேலை, ஒரு குடிநீர் குவளை, ஒரு பெரிய மக், ஒரு தட்டு, ஒரு போர்வை ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும்.
தனக்கு நீரிழவு நோய் மற்றும் ரத்த அழுத்தமும் இருப்பதால் வீட்டுச் சாப்பாடு தவிர வேறு எதுவும் ஒத்துக்கொள்ளாது என்று சிங்கம் தனி நீதிபதியிடம் கோரினாலும் நீதிபதி அவற்றை மறுத்து விட்டார். சின்னம்மாவுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் சிறையில் கிடையாது என்று கன்னட செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறையில் சின்னம்மாவுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வரையில் ம.நடராசன் அங்கேயே டோரா போடுவார் என்று குருவிகள் தெரிவிக்கின்றன.
சிறையில் அன்றாட வேலையாக ஊதுபத்தி தயாரிப்பது, மெழுகுவர்த்தி செய்வது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சின்னம்மாவுக்கு ஒதுக்கப்படும். இதற்கு நாளொன்றுக்கு ரூ.50 ரூபாய் கூலி ஜாஸ் சினிமாசின் ஓனருக்கு வழங்கப்படும்.
சசிகலா கூட வந்த கார்களில் ஐந்து கார்கள் அங்கே இருந்த அதிமுக காரர்களால் தாக்கப்பட்டன. காரணம் சின்னம்மாதான் அம்மாவை 33 வருடங்களாக ஏமாற்றி விட்டாராம்.
இதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னம் சசிகலா கும்பலிடமே இருப்பது நல்லது. அப்போதுதான் அந்த சின்னம் தோற்றுவித்திருக்கும் மூடநம்பிக்கை மக்களிடம் ஒழியும். இறுதியில் இரட்டை இலையும் மறையும்.
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்

கருத்துகள் இல்லை: