சனி, 18 பிப்ரவரி, 2017

P.K.Mahanandia.. காதலியை தேடி சைக்கிளில் (3600 Km) சுவீடன் சென்ற ஒரிசா ஓவிய கலைஞன் !


My tribe worshiped the forces of nature – fire, air, water - we did not personify them. My blues are the real sky; my greens are the nature as she is. To my motherland’s people, the sun is the highest God, the God of creation and life. The faces? Faces fascinate me. In every face there are a million different faces, a million different expressions. I want to penetrate this mystery – why are there all these expressions? What is the true nature of man? Art can reveal it to us
Karthikeyan Fastura : காதலை விட ஒருவருக்கு சக்தி தருவது எதுவும் இல்லை.
PK மகாநந்தியாவின் காதல் மிகச்சிறந்த உதாரணம்
நந்தியா இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலத்தில், பின்தங்கிய சாதியடுக்கில், வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவிய கலைஞன். முக்கிதக்கி ஒரிசாவின் கள்ளிக்கோட்டை அரசு கலைகல்லூரியில் ஓவியம்,கைவினை படிப்பை முடிக்கிறான். பிறகு டில்லி பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைக்கிறது. தங்குவதற்கு தேவையான பணம் போதவில்லை, தெருவோரம், பஸ் நிலையம் என்று கிடைத்த இடத்தில் தங்குகிறான். கன்னாட் பிளேஸ்ஸில் இருக்கும் நீருற்றின் அருகில் உட்கார்ந்து படம் வரைவான். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது கல்விப்பயணத்தை தொடர்கிறான்.
அப்போது சர்லேட் வான் ஸ்கெட்வின் என்ற ஸ்பெயின் சீமாட்டியை டில்லியில் சந்திக்கிறான். அந்த பெண் இவனிடம் தன்னை ஓவியமாக வரைய வேண்டுகிறாள்.
இருவரும் காதல்வயப்படுகிறார்கள். டில்லியில் ஒருமாதம் தங்கள் காதல் ஓவியத்தை தீட்டுகிறார்கள். அவளுக்கு பயணத்திட்டம் முடிகிறது. ஸ்பெயின் திரும்புகிறாள்.

இருந்தபோதும் தான் நிச்சயம் ஸ்பெயின் வந்து அவளை சந்திப்பதாக கடிதம் எழுதுகிறான்.
சொன்னதை போலவே கிளம்பிவிட்டான் தன்னிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் விற்று ஒரு பழைய சைக்கிளும், 80$ பணத்துடன் ஸ்வீடனுக்கு
அந்தகாலத்தில் ஹிப்பி கலாச்சாரம் பரவலாக இருந்தகாரணத்தால் லண்டனில் இருந்து கோவா வரை மிக நீண்ட பயணத்திற்கு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட பஸ்கள் விடப்பட்டு இருந்திருக்கிறது. அவை இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், வழியாக ஐரோப்பா வரை சென்றுள்ளது.
அவளை வரைந்த ஓவியத்துடன், அவன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 3600 கிமீ தூரம் கடும்குளிர், கடும்வெயில், கரடுமுரடான மலைப்பாதைகள், பாலைவனங்கள், காடுகள் எல்லாவற்றையும், தேச எல்லைகளை கடந்து பயணிக்கிறான்.
பயணத்தில் உணவுக்கும்,பயணத்திற்கும் வேண்டி பார்ப்பவர்களை வரைந்து கொடுத்து கொஞ்சம் சம்பாதிக்கிறான்.
பிற்பாடு அவன் பேட்டியில் “நான் என் காதலுக்காகத்தான் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மற்றபடி எனக்கு சைக்கிள் பயணம் பிடிக்காது” என்கிறான்.
ஸ்பெயினில் உள்ள போரஸ் என்ற அந்த நகரத்தை அடைகிறான். எல்லைகாவலாளிகள் இவனை விசாரிக்கிறார்கள். தான் தன் காதலியை தேடி இந்தியாவில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து வந்திருப்பதாக சொல்கிறான். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து யார் அந்த பெண்மணி என்று விசாரிக்கிறார்கள். அவன் வரைந்த ஓவியத்தை காட்டுகிறான். அவர்களுக்கு மயக்கமே வருகிறது. ஸ்பெயின் தேசத்தின் மிக முக்கியமான பாரம்பரியமான ராயல் பிரபு குடும்பத்தின் பெண் அவள்.
அவனின் மெய்சிலிர்க்க வைக்கும் காதல் அவளின் குடும்பத்தினை பேச்சற்று போகச்செய்கிறது. ஒன்றும் சொல்லமுடியவில்லை. திருமணம் நடக்கிறது.
இது வெறும் உணர்ச்சிவெளிப்பாடு ரெம்பகாலம் நீடிக்காது என்று நிறையபேர் ஆருடம் சொன்னார்கள். அவர்கள் காதல் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இன்றும் வளர்கிறது இரண்டு பிள்ளைகளுடன். ஸ்பெயினில் இசையும் ஓவியமுமாக இன்றும் அவர்கள் காதலை கலையை வளர்கிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்டமக்களின் கல்விக்கு உதவி செய்கிறார்கள்.
எந்த மண்ணில் அவமானங்கள் அடைந்தானோ, எந்த ஊர் மக்கள் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி கல்லால் அடித்தார்களோ அதே ஊர் முப்பது வருடங்களுக்கு பிறகு ஒருநாள் ஒரிசா புயலில் வெள்ளத்தில் துன்புற்ற செய்தி அறிந்தபோது ஸ்பெயினில் இருந்து தன்மனைவியுடன் ஓடிவந்தான். ஒரிய அரசு அவர்களுக்கு தனி ஹெலிகாப்டர் கொடுத்து அவனது ஊருக்கு அனுப்பிவைத்தது.
பின்னாளில் ஒரு நேர்காணலில்
"காதல் என் மீது கல்லெறிந்தவர்களை மன்னிக்கும் சக்தியை கொடுத்தது. அவர்களுக்கு கல்வி அறிவு தேவை. அதை கொடுக்க என்னால் இயன்ற உதவியை செய்வேன். எங்களது கதை பலருக்கு நம்பிக்கை கொடுப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி" என்றார்.
ஆதலால் காதல் செய்வீர்
(மீள்பதிவு)முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: