வியாழன், 23 மார்ச், 2017

62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்திற்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 2,014 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிவாரணத்தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு 62 ஆயிரம் கோடி கோரியதற்கு மத்திய அரசு வெறும் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வறட்சி நிவாரணமாக 39,566 கோடியும், வெள்ள நிவாரணமாக 22, 573 ஆயிரம் கோடியும் கோரியிருந்த நிலையில் வெறும் 2,014 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: