வியாழன், 23 மார்ச், 2017

பொன் ராதா மீது செருப்பு வீச்சு..: ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் இறுதி சடங்கில்

ஜேஎன்யூ பல்கலையில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த திங்கள் அவரது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்க்பபட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள் முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலைதான் என அறிவித்தனர்.
இதையடுத்து நேற்றிரவு அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.

C7BBdOaWgAAgQfL.jpg large.jpg
அப்போது ஒருவர் அமைச்சர் மீது செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவருக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மைக் மீது பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17201025_1390524984304099_6360385968850517712_n.jpg
இதனிடையே, பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசியவர்  பெயர் சாலமோன் என்றும் அவர் இந்திய மக்கள் முண்ணனி இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.       thetimestamil.com/

கருத்துகள் இல்லை: