வெள்ளி, 28 ஏப்ரல், 2017

Late ஜெயலலிதாவின் ஊழல் அழுக்கை கழுவ துடியாய் துடிக்கும் பார்ப்பனர்கள் !

தினகரன் விசயத்தில் மத்திய அரசு நடக்கும் விதம் அராஜகமானது என்பதில் ஐயமில்லை. லஞ்சம் வாங்க முயன்றவர் யார் என்பதைப் பற்றி கேள்வி கேட்காமலேயே விசாரணை போகும் பாதை நிச்சயம் எதிர் கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை..
அதே நேரத்தில் தினகரன் ஊட்டி வளர்த்த, தன் சாதி பாசத்திற்கு உரியவர்கள் நன்றிக் கெட்டு, துரோகம் செய்துக் கொண்டிருப்பது ஆண்ட சாதிகளின் செயல்களில் அடிப்படையானது.
நன்றிக் கெட்டவர்கள், துரோகிகள்தான் அரசாள வாய்ப்புப் பெறுகிறார்கள் என்பது தமிழ் நாட்டின் வரலாற்றுச் சாபம்..
விடியுமா..?
சன்னா
Gowthama Sanna
Prakash JP தமிழகத்தின் ஒரே தீயசக்தி ஜெ. அரசியலில் ஈடுபட்ட நாள் முதல், ஜெ.வின் அல்லக்கைகளாகச் செயல்பட்டு இதே. நடராஜன், தினகரன், திவாகரன்  கோ எத்தனை ஆட்களுக்கு, எத்தனை இடங்களில் கையூட்டு கொடுத்திருப்பார்கள். நீதியைக் கேலிக் கூத்தாக்கிய குமாரசாமி உட்பட... இந்தியாவைப் பொறுத்தவரையில் அயோக்கியத்தனம், நாதாரித்தனம் பண்ண ஒரே ஒரு பிரிவினருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதே அயோக்கியத்தனத்தை ஜெ. பண்ணினால் , இந்தியாவிலேயே கேள்வி கேட்பார் இல்லை.

இங்கு லாலு, தினகரன்களுக்கு மட்டுமே திறமையுடன் செயல்படும் சட்டவிதிகள். ஷேஷாத்திரிகளையும், ஜெயலலிதாவையும் கண்டு கொள்வதில்லை..
மனுதர்ம ஆட்சிதான் இந்தியாவில் ஆண்டாண்டு காலமாய்.
பி.கு.: தினகரனோ, பன்னீரோ - அனைத்து அதிமுக கூன்பாண்டிகளும் சிறையில் இருக்க வேண்டியவர்களே..
அ. வெற்றிவேல்  முகநூல் பிறாண்டல்கள்

கருத்துகள் இல்லை: