செவ்வாய், 23 மே, 2017

திருமாவளவன் :நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 2 வது கட்டமாக நடந்து வரும் 42 வது நாள் அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர், ‘’இந்த போராட்டம் மண்ணைக் காக்கும் போராட்டம். இதுவரை தலைவர்கள் போராட்டம் நடத்தி மக்களை அதில் கலந்து கொள்ள செய்வது தான் வழக்கம். ஆனால் இந்த போராட்டம் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அரசியல்வாதிகளை தலைவா்களை மக்கள் இழுக்கிறார்கள். தலைவர்கள் மக்கள் பின்னால் வருகிறார்கள். காலம் மாறிவிட்டது. பலரும் நான் ஆட்சிக்கு வந்தால்...என்று சொல்வார்கள். ஆனால், நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும். அரசியல்வாதிகளுக்கு ஊழல், முறைகேடுகளை சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள் தான்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்றும் இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி இருக்கிறது என்பதை அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சொல்லி அதில் பல வழிகளில் வருமானம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியதும் அதிகாரிகள் தான். தமிழகத்தில் ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்கள் விடமாட்டார்கள். மத்திய ஆட்சியாளர்கள் இதை விட்டு ஓட வேண்டும்’’ என்றார். - பகத்சிங்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: