சனி, 27 மே, 2017

இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தை தண்ணீர் சூழ்ந்தது

கொழும்பு : இலங்கையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இலங்கை பார்லி.,யை தண்ணீர் சூழ்ந்தது. இதனை காக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக இலங்கையில் மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். தாய்நாட்டுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: மழை காரணமாக இலங்கை பயங்கர சேதத்தை சந்தித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமால், அவரது டுவிட்டரில்; மிக மோசமான செய்தி இலங்கைக்கு வந்துள்ளது. நாட்டு மக்கள் காத்திட நான் பிரார்த்திக்கிறேன். எனது தாய் நாடு ஸ்ரீலங்காவிற்காக நண்பர்களே பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மீண்டும் மழைக்கு வாய்ப்பு இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கைக்கு மீண்டும் பெரும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தினமலர்

கருத்துகள் இல்லை: