புதன், 21 ஜூன், 2017

மாணவி சாமியாரின் ஆண் உறுப்பை அறுக்கவில்லை ... காதலன்தான் குற்றவாளி .. காங்கேசானந்தா சுவாமி ..

நான் சாமியாரின் ஆண் உறுப்பை அறுக்கவில்லை. எனது காதலன்தான் சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்தார் என்று மாணவி கூறியிருக்கிறார்
 திருவனந்தபுரம் பேட்டையைச் சேர்ந்த கங்கேசனந்தா சாமியார் இவரின் மர்ம உறுப்பை சட்டக் கல்லூரி மாணவி அறுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது அந்த மாணவி, சாமியார் என் அம்மாவிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அப்போது நான்பருவ வயதை அடைந்தவுடன் எனது தாயாரின் சம்மதத்துடன் என்னையும், தனது காம பசிக்கு பயன்படுத்திக் கொண்டார்.
என்னை சாமியார் கடந்த 9 வருடமாக வீட்டில் வைத்துக் கற்பழித்து வந்தார். அதனால்தான் நான் அவரின் ஆண் உறுப்பை அறுத்தேன் என்று கூறியிருந்தார். பல பெண்கள் அமைப்புகள் இந்த பெண்ணுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கின.
இந்த நிலையில் சாமியாரின் வக்கீலுக்கு அந்த மாணவி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் நான் சாமியாரின் ஆண் உறுப்பை அறுக்கவில்லை. எனது காதலன்தான் சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்தார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது சாமியாரின் வக்கீல் மாணவி எழுதிய கடிதத்தை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார். அரசு வக்கீலே அந்தப் பெண், மாற்றி, மாற்றிப் பேசுகிறார். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும் என்று கூறினார்.
நீதிமன்றமும் அந்த மாணவியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்தது. இந்த நிலையில் இன்று திடீர் பரபரப்பு திருவனந்தபுரத்தில் ஏற்பட்டது. ஆண் உறுப்பு இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சாமியாரை, தனது தாயாருடன் அந்த மாணவி நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு 15 நிமிடம் வரை நீடித்தது. பின்னர் அந்த மாணவி தன் தாயாருடன் பேட்டை காவல் நிலையத்தில் மனு ஒற்றை அளித்தார்.
அந்த மனுவில் மாணவிகூறியிப்பதாவது. நான் அய்யப்பன் என்பவரை காதலிக்கிறேன் என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பல முறை என்னிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் சாமியாருக்கும், எனது தாயாருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை பயன்படுத்திக் கொண்ட அவன். இருவரிடமும் பல லட்சங்கள் பணத்தை சுருட்டியுள்ளான். சாமியார் எனது தாயாருடன் உல்லாசமாக இருந்தபோது அங்கு வந்த எனது காதலன் அவரது உறுப்பைக் கத்தியால் வெட்டி துண்டித்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கைக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி கேரள டிஜிபி சென்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
அய்யப்பன்தாஸ் இந்தச் சட்ட மாணவிக்கு அறிமுகமானாராம். பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சாமியாரைப்பற்றி தெரிந்தவுடன். காதலியின் தாயார் மற்றும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத் துவங்கினான். எங்கே சாமியார் தனது காதலியின் மீதும் கை வைத்துவிடுவானே என்கிற பயத்தில் சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்துள்ளார்.
இவை அனைத்தும் உண்மை கண்டறியும் சோதனையில் வெளிவரும் என்று பரபரப்பாக திருவனந்தபுரம் போலீசார் மத்தியில் பேசப்படுகிறது. லைவ்டே 

கருத்துகள் இல்லை: