வெள்ளி, 23 ஜூன், 2017

உபி . புகார் கொடுக்க சென்ற பெண்ணை படுக்க அழைத்த போலீஸ் .. இருவரால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணை ..

The rape survivor told TOI, "My ordeal began soon afterwards. Whenever I approached SI Jai Prakash Singh seeking arrest of the accused, he would say he first wanted to have sex with me. He even called up on my mobile phone and invited me to visit him in his room alone.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவரை சமீபத்தில் இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்க அவர் காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. புகார் கொடுக்க சென்ற தன்னை சப்-இன்ஸ்பெக்டர் படுக்கைக்கு அழைத்ததை தான் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்< ஆனால் அவருடைய வீடியோவை பார்த்த எஸ்பி அலுவலக அதிகாரிகள் அந்த வீடியோவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் குரல், வீடியோவில் இருந்த குரலுடன் ஒத்து போகவில்லை என்றும், இருப்பினும் அந்த பெண்ணின் புகார் மீது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது. வெப்துனியா

கருத்துகள் இல்லை: