வெள்ளி, 28 ஜூலை, 2017

பார்ப்பானின் திருப்பதியை காப்பி அடித்து விடாதீர்கள் .. அல்லலோயா காமடியைவிட அது மோசம்!

Vijay Bhaskarvijay :நிம்மதியாக வாழ்வதற்கு சில வழிகள்...
1.வீட்டுக்குள் வந்து இந்த கோவிலுக்கு இது செய்தா நல்லது, அந்த கோவிலுக்கு அப்படி நேர்ந்துகிட்டா நல்லது என்று சொல்லும் உறவினர்களை உடனே எதையாவது பேசி “எனக்கு இதில் நம்பிக்கையில்லை” என்று நிறுத்திவிடுங்கள்.
2. உங்கள் முகத்தைப் பார்த்து குறிசொல்லும் ஒரு மொக்கை ஆசாமி ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். அவரையெல்லாம் பக்கத்திலேயே அண்ட விடாதீர்கள்.
3.உங்கள் மகனுக்கோ மகளுக்கோ ஜாதகம் எழுதாதீர்கள். உங்கள் அம்மா அப்பா ஜாதகம் எழுதியிருந்தால் வாங்கி வந்துவிடுங்கள். ஒருவேளை அவர்களிடம் இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி அதை எந்த ஜோசியரிடமும் காட்டக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்.
4.அந்தரங்கமான மூடநம்பிக்கைகள் உங்களுக்குள் இருக்கும். அதை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். வெளியே குடும்பத்தில் சொல்லாதீர்கள். சொல்லும் போது அது பயத்தைக் கொடுத்து குடும்ப மூட நம்பிக்கையாக ஆகிவிடும்.

5.நல்ல நாள், கெட்ட நாள் என்ற பகுதியையே மறந்துவிடுங்கள். முடிந்தால் அவைகள் இல்லாத கேலண்டராக வாங்கி வையுங்கள். எக்காரணம் கொண்டும் இன்று நல்ல நேரம் எப்போது என்று பார்க்காதீர்கள். குடும்பத்திலும் அதை அறிவுறுத்துங்கள்.
6. எப்படி ஒரு அல்லேலூயா பிரச்சாரக் கூட்டத்தை காமெடியாக பார்ப்பீர்கள். அதே காமெடி உணர்வு உங்களுக்கு கணபதி ஹோமம் பார்க்கும் போதும் வரவேண்டும். அவன் இயேசுவை கும்பிட்டால் நீங்கள் சொர்க்கம் போகலாம் என்று அவனை முன்னிறுத்துகிறான். இவன் கணபதி ஹோமம் செய்யமல் போனால் உன் வீடு அவ்ளோதான் என்று பயமுறுத்துகிறான். வாய்விட்டு சொல்லி சொல்லி திணித்தால்தான் அது திணிப்பு அல்ல. இது மாதிரியான ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
7. ’பணக்காரன் - புரோகிதன்’ உறவு பற்றி கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணக்காரனுக்கும் ஒரு புரோகித ஆலோசகர் இருப்பார். அந்த புரோகித ஆலோசகர் எப்படி தந்திரமாக பணக்காரனை சுரண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதை தெரிந்து கொள்வது எளிது. இந்த Concept ஐ வைத்துக் கொண்டு நீங்க தேட ஆரம்பித்தாலே நாலைந்து சம்பவங்கள் நிச்சயம் கிடைக்கும்.
8. ஆப்ரகாம் கோவூர் மாதிரி பகுத்தறிவாளர்களை கொஞ்சமாவது படியுங்கள். பகுத்தறிவு என்பதை ஒவ்வாத சொல்லாக நினைக்காதீர்கள். காய்ச்சலின் வெளித்தோற்றம்தான் உடல் சூடு. அந்த உடல் சூட்டை மட்டும் தணித்துக் கொண்டிருக்காமல், மருந்து கொடுத்து முக்கிய காரணியை அகற்றுவதுதான் பகுத்தறிவு. இந்த கோணத்தில் பகுத்தறிவைப் பாருங்கள். வாழ்க்கையில் இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு பகுத்தறிவு Text ஐ படியுங்கள்.
9. பிராமணர்களின் பக்தியை பார்த்து நீங்கள் காப்பி அடிக்காதீர்கள். அவர்கள் திருப்பதி வேங்டரை கும்பிடுவதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. திருப்பதி வேங்கடரும் இந்து மதமும் பிராமணர்களுக்கு மாபெரும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது. மற்றவர்களை விட நீ உயர்ந்தவன் என்ற கருத்தை அமதமும் மதத்து எழுத்துக்களும் அவர்களுக்கு கொடுத்திருப்பதால் அவர்கள் பக்தியாய் இருக்கிறார்கள். அந்த பக்தியைப் பார்த்து நீங்களும் காப்பி அடித்து இருக்கும் போது ஆம் நான் அடிமை என்று ஒத்துக் கொள்வது போன்றதாகும். இது பற்றி யோசியுங்கள்.
10. பிராமணர்களின் பிள்ளைகள் மத்தியில் எப்படி அவர்கள் System ஏன் எதற்கு என்று கேட்க முடியாதபடி ”பெருமாள் பற்றை” புகுத்துகிறது என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிராமண நண்பரிடம் இது பற்றி சாதரணமாக பேசினால் அவரே சொல்வார். இப்படி புகுத்தப்படும் ”பெருமாள்பற்று” அவர்கள் எவ்வளவுதான் முற்போக்காக ஆனாலும் அது எங்காவது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கமல் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்த "புகுத்துதல்” Concept பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11. ஒரு பிற்படுத்தப்பட்ட பணக்காரர் எப்படி பிராமணராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் என்பதை கவனியுங்கள். சரவணபவன் முதலாளி போன்றவர்களை கொஞ்சம் ஆராயுங்கள்.
12.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பல்வேறு மதரீதியான மூடநம்பிக்கைகளின் Flow இப்படித்தான் இருக்கிறது.
இந்து மதத்தில் ஒரு பகுதியான பார்ப்பனியம் - அதிலிருந்து பிராமணர்கள் - அதிலிருந்து பணக்கார பிற்படுத்தப்பட்டோர் - அவர்களைப் பார்த்து மற்றவர்கள். இப்படித்தான் பல மூடநம்பிக்கைகள் பரவுகிறது.
13. இந்த மூடநம்பிக்கைகளை பரப்பும் ஆளுமைகளை இனம் கண்டுகொள்ளுங்கள். இவர்கள் இப்படி சொல்வார்கள் “இந்த ஜோசியரிடம் போ இவர் உன் நலன் பார்த்துக் கொள்வார் “ என்ற ரீதியில் சொல்வார்கள்.
14. சக்தி விகடன் போன்ற சமூக விரோத கருத்துக்களை மூடநம்பிக்கைகளை பரப்பும் இதழ்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். குடும்பத்தில் யாராவது சக்தி விகடன் படித்தால் அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள்.
15. வாஸ்து சாஸ்திரம் போன்ற பேச்சுக்கள் வீட்டுக்குள் யாரும் பேச முடியாதபடி முதலிலேயே எதிர்ப்பு பேசி முடித்து விடுங்கள்.
16. உங்கள் கணவரோ மனைவியோ மூடநம்பிக்கை வைத்திருந்தால் அதை பேசி பேசி சரிசெய்யுங்கள். முதலில் இதைச் செய்ய வேண்டும். பகுத்தறிவை பரப்புவது எளிது. ஏனென்றால் அதுதான் உண்மை.
17. மாமனார் வீட்டின் வழியே பல மூடநம்பிக்கைகள் வரும். அதை முதலிலேயே எதிர்த்துவிடுங்கள். திருத்தணிக்கு கிருத்திகை என்று தெரியாமல் உங்கள் மாமனார் உங்களை கூட்டத்தில் கூட்டிச் சென்றால். போய் திரும்பும் வரை காரில் மூடநம்பிக்கைகளை மெலிதாக திட்டிக் கொண்டும், அங்கே இருக்கும் சுகாதாரமற்ற சூழலை விமர்சனம் செய்து கொண்டே வாருங்கள். கல்யாணமாகி ஒருவருடத்தில் இவன் அல்லது இவள் பக்திக்கு, மூட சம்பிரதாயங்களுக்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை எப்படியாவது துணை வீட்டுக்கு புரிய வைத்துவிடுங்கள்.
18. மொத்ததில் “இவரா இவரிடம் இந்த டாப்பிக்கை எடுக்கவே முடியாதே... இந்த குடும்பமா இந்த குடும்பத்துகிட்ட இந்த மூடசம்பிரதாயத்தப் பத்தி பேசவே முடியாதே” என்ற சூழலை உருவாக்குங்கள்.
19. ஒரு வாளியில் ஒட்டை போட்டுக் கொண்டு நீரை நிரப்ப முடியாது போலத்தான் ஒரு குடும்பத்தில் மூடநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அறிவியல் மீது Passion வளர்க்க முடியாது என்பதும். மூட சம்பிரதாயங்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது என்பதும்.
20. இதை ஏதோ சாதரணமான விஷயமாக நினைத்து அலெட்சியமாக இருக்காதீர்கள். வாஸ்து, ஜோசியம், நாடி ஜோதிடம் இது போன்று பல மூடநம்பிக்கைகளால் அப்படியே அழிந்து போன குடும்பங்கள், மனங்கள் ஏராளம். எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் கணவரோடு சேர்த்து கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டினார். வீடு கட்டி நான்கு வருடங்கள் கழித்து அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. சொந்த பந்தங்கள் சும்மானாலும் “வீடு ராசியில்லையோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். உடனே அப்பெண் வீடு சரியில்லை, வீடு சரியில்லை என்று தீவிரமாக புலம்ப ஆரம்பித்துவிட்டார். தானும் கணவரும் ஒவ்வொரு காசாக உழைத்து உழைத்து கட்டிய வீட்டை சிறு மூடநம்பிக்கை காரணமாக விற்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக குழந்தைக்கு உடல்நிலை சரியாக எப்படியோ பலரும் சமாதானப்படுத்திவிட்டார்கள். அந்த பெண் மூடநம்பிக்கைக்கு எதிராக அவர் மனதை வைக்காத காரணத்தினாலேயே இவ்வளவு துன்பம்.
21. நீங்கள் உங்கள் மனதை, உங்கள் குடும்பத்தை மூடநம்பிக்கைகளுக்கு ( ஜோசியம், வாஸ்து, சடங்குகள்) போன்றவற்றுக்கு எதிராக தயாராக வைத்திருக்கிறீர்களா ? இல்லையா ? அதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லையெனில் தயாராக இருங்கள். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உங்கள் மனதோடு விளையாட வரலாம்.
22.விழித்திருங்கள். அந்த விழிப்பை தர்க்கப் பூர்வமாக் யோசித்து, சமூகத்தை கவனித்து அடைந்துவிடுங்கள்.

கருத்துகள் இல்லை: