புதன், 26 ஜூலை, 2017

திருச்செந்தூர் .. ஊழலுக்கு உதாரணம் ! இந்தியாவின் முதல் மூத்த ஊழல் குற்றவாளிகளே பார்ப்பனர்கள் தான்,

முழுக்க முழுக்க பார்ப்பன அதிகார கட்டுப்பாட்டில் இருந்தால் ஒரு கோவில் நிர்வாகம் எப்படி corrupted ஆக இருக்கும் என்பதற்கு திருச்செந்தூர் கோவில் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. திருச்செந்தூர் கோவில் பார்ப்பன கமிட்டி உறுப்பினர்களே தேங்காய் பழம் விற்கும் உரிமை முதல், கோவிலுக்கு அருகில் மிக பரபரப்பாக வியாபாரம் ஆகக்கூடிய உணவு விடுதிகளை நடத்துவது வரை அதிகாரத்தில் திளைத்து இருக்கிறார்கள்.
தமிழக அரசாங்கங்கள் அறங்காவலர் குழு அமைத்து கட்டுப்பாடுகள் விதித்த போது இவர்கள் ஏன் "லபோதிபோ" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள் என்பதை, நீங்களே கொஞ்சம் பக்தி போதையை இறக்கி விட்டு, சுற்றி நடப்பதை கவனித்தால் விளங்கும்.
ஜாயாலுக்காஸ், கல்யாண் ஜிவல்லர்ஸ் போன்ற நகைக்கடைகளில் நீங்கள் நுழைந்தால் நீங்கள் நகைகள் எடுத்து முடிக்கும் வரை ஒரு representative உங்கள் ஷாப்பிங் முடிக்கும் வரை கூடவே இருப்பார்கள், அதுபோல கொஞ்சம் பணக்கார தோரணையில் ஸ்பெசல் கட்டணம் எடுத்து நீங்கள் தரிசனத்துக்கு சென்றால், திருச்செந்தூர் கோவிலில் பார்ப்பன குருக்கள் உங்களை இழுத்து கொண்டு போய், free தரிசன கூட்டம் ஒரு பக்கம் அல்லோலல பட, குறுக்கு வழியில சாமிக்கு பக்கத்தில் உங்களை நிற்க வைத்து சகல மரியாதையும் செய்து மீண்டும் உங்களை வெளியே கொண்டு வந்து விடும் வரை உங்களை பார்த்து கொள்வார்கள்.

அதற்கு ஊதியமாக, ஐநூறில் இருந்து இரண்டாயிரம் வரை பெறுகிறார்கள், இன்னும் வசதி படைத்த பக்தி அடிமைகளாக இருந்தால் நோட்டுகளை கணக்கு பார்க்காமல் கொடுக்கிறார்கள்.
இது போதாத குறைக்கு, கருவறையை சுற்றி centralized AC , வாழ்க்கையை எப்படி சுகபோகமாக வாழ முடியுமோ, அப்படி ஒரு சுகபோகம். உலகத்திலேயே இப்படி ஒரு தொழிலை தன்னோடு வைத்து காலம் கடத்தும் ஒரு strategy எவனும் அடித்து கொள்ளவே முடியாத strategy . பார்ப்பனர்களை குறித்து எனக்கு வியக்கத்தக்க அபிப்பிராயம் உருவாவதற்கு, இந்த strategy ஒரு முக்கிய காரணம்.
வரலாற்றிலும், பார்ப்பனர்களை கட்டுப்படுத்தாமல் அவரவர் விருப்பத்திற்கு விட்ட அரசர்கள் ஆட்சிகள் பொற்காலம் ஆட்சியாகவும், இவர்களை கட்டுப்படுத்திய அதிகாரத்தை கொடுங்கோல் ஆட்சியாகவும் தான் சித்தரித்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நடைமுறை காலத்திலேயே, கோவில் விவகாரங்களில் திமுக செய்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்மத்தை கக்கிய பல எடுத்துக்காட்டுகளை நம்மால் வரிசை படுத்த முடியும்.
புதுவையில் கோவில் கமிட்டிகளின் தலைமை பொறுப்பில், ஐந்து வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கமிட்டியில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று சட்டமே இருந்தது, அப்படி ஒரு பிரசித்தி பெற்ற கோவிலில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஜெனரல் சமூகத்தை சேர்ந்த அனைவரும் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்க பட்டனர், அந்த குழுவை அமைத்தவுடன் அவர்கள் செய்த பல சீர்திருத்தங்கள் அந்த கோவிலை நீண்ட காலமாக சுரண்டி வந்த பார்ப்பனர்கள் கடும் எரிச்சலோடு வேறு வழியின்றி ஏற்று கொண்டார்கள். அந்த சீர்திருத்தங்கள்,
"கோவில் சம்மந்தமாக நடக்கும் வியாபாரம், அதன் லாபம், டெண்டர் விடுவதை எல்லாம், அந்த கோவில் அறங்காவலர் குழுவில் இருப்பவரா, அவரின் சொந்த காரர்களோ, யாரும் அனுபவிக்க முடியாது, டெண்டர் எடுக்க முடியாது, அதன் லாபம் முழுக்க முழுக்க கோவிலுக்கே சேரும்.
ஆனால் அதற்கு முன்னே, அந்த கோவில் குருக்களே கோவிலுக்குள் தேங்காய் பழம் மாலை விருக்கும் வியாபாரம் செய்து வந்தார், வியாழக்கிழமை குரு தட்சிணா மூர்த்திக்கு பக்தர்கள் கடலை மாலை சாத்துவது வழக்கம், அந்த குருக்கள் ஒரு நூறு கடலை மாலை வியாபாரம் செய்தால், அது வியாபாரமாகி அந்த மாலைகள் கடவுளுக்கு சாத்தப்பட்ட பின்பு, குருக்கள் மீண்டும் அதே மாலைகளை வியாபாரத்துக்கு rotate செய்வது எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு தான் கடுமையான விதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இதை படித்து குதிக்க போகிறவர்களுக்கும் இதன் உண்மை தன்மைகள் விளங்கும், ஆனால் ஒருபோதும் வெளியாட்களுக்கு தங்கள் சாதியினரை விட்டு கொடுக்க மாட்டார்கள், மனசாட்சி உள்ளவர்கள் படித்து மெளனமாக கடப்பார்கள். செய்கிற தொழிலுக்கு தீங்கு நினைக்காமல் இறை பணியை செய்யும் பார்ப்பனர்கள் வெகு குறைவு, அவர்கள் இந்த main stream அரசியலில் வந்து அரஜாகமாக பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் சமூகத்திலேயே முன்னேறாத நிலையில் இருப்பார்கள்.
சில திமிரெடுத்த பார்ப்பனர்கள், "பார்ப்பனர்கள் அரசு பணிகளில் இருந்த வரை எந்த ஊழலும் இல்லை, ரிஸர்வேஷனில் படித்து இந்திய துறைகளே கறை படிந்து விட்டது என்று திமிராக பேச கண்டேன், அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்,
"இந்தியாவின் முதல் மூத்த ஊழல் குற்றவாளிகளே பார்ப்பனர்கள் தான், சட்டம் எழுதப்பட்ட அரசு அமைவதற்கு, வெள்ளைக்காரன் வந்து வரி வாங்கியதிற்கு முன்னரே ஊழலின் முன்னோடிகளாக கோவிலில் இருந்தது பார்ப்பனர்கள் என்பதை வரலாறு மறந்து விடாது. வாசுகி பாசக்கார்

கருத்துகள் இல்லை: