சனி, 23 செப்டம்பர், 2017

ரசித்தலும் காதலித்தலும் ஒரு தவறான தொணியில் பார்க்கப்படுகிறது ஏன்?

tamil.arasan.: எழுத்தாளனை முடிந்த மட்டும் காதல் செய்யாதீர்கள் என்கிற ஒரு வாதத்தை சொற்ப நாட்களுக்கு முன் கடந்தோம்.
இங்க ஒரு ஆண் எழுத்தாளர் மேல் ஒரு பெண் காதல் ரீதியாகவும்,உடலியல் ரீதியாகவும் ஈர்ப்பு கொள்ளும் சூழல் இருக்கிறது.இதுவே மாறாக ஒரு ஆண் வாசகன் ஒரு பெண் எழுத்தாளரை அவர்கள் எழுத்தின் மூலமாக மரியாதை தர வேண்டிய சூழலிலே பாவிக்கப்படுகிறது.இந்த ஹே தில் ஏ முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூர்,ஒரு பெண் எழுத்தாளருடன் காதல் வயம் கொள்வது போல் இருக்கும் அதைப் போன்ற சாத்தியம் பெண்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.
எத்தனையோ ஆண் எழுத்தாளர்களை இன்னும் இன்னும் திருமணமானவராக இருந்தாலுமே ரசிக்கவும்,அதை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றது.
இதுவே மாறாக ஒரு ஆண் வாசகன் உதாரணத்திற்கு பாடலாசிரியர் தாமரையையோ இல்லை,அவரைப் போன்றவரையோ ஒரு மரியாதையின் நிமித்தமாகவே ரசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.இன்னும் மணிரத்னம்,கௌதம் மேனன், போன்றவர்கள் மீது அவர்களது கலையின் வாயிலாக காதலித்து காதல்காரர்களாக சொல்லிவிட இருக்கும் சூழல் தாமரைக்கோ,இறுதிச் சுற்று சுதாவிற்கோ தருவதில்லை.
நான் ஒரு முறை நடிகை ஸ்ரீ வித்யாவின் அபூர்வ ராகங்கள் படம் பார்த்துவிட்டு,இவங்க ரொம்ப அழகா இருக்காங்க.
,இவங்க இருந்த காலத்தில் பிறந்தருக்கலாம், இவங்க அப்படி நடிக்கிறார்கள் இவ்ளோ அழகு என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதை மீறிய அவர்களை ரசித்தலும் காதலித்தலும் ஒரு தவறான தொணியில் பார்க்கப்படுகிறது ஏன்?
ஒரு இளம் பெண்ணால் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு கலைஞனை காதலனாக பாவித்து,ஊடல் சார்ந்து எழுதுவதில் இங்கு சிக்கல் இல்லை.அதுவே மாறாக ஒரு ஸ்ரீ வித்யாவையோ,இல்லை இன்ன பிற பெண் பாடலாசிரியரையோ, இயக்குனரையோ அந்த காதல் தொணியிலும் ஊடல் தொணியிலும் காதல் கொள்வது இங்கு ஏன் ஏற்கப்படவில்லை.
அப்படி நானோ யாரோ வர்ணிக்க நேர்ந்தால் ஒன்று பதிவை நீக்கம் செய்யுங்கள் என்றோ,இல்லை என்னை திட்டியவாரோ பதில்களே வரும்.இந்த இடத்தில் இந்த சமூக மனப்பான்மை எப்படியான ஒன்றாக இருக்கிறது.கல்யாணமான எழுதுகிற ஆணோ இல்லை கல்யாணம் ஆகிடாத ஆணையோ ஒரு வாசகி காதல் கொள்ளும் நிலை இருக்கும் பொழுது.
ஏன் ஒரு பெண் எழுத்தாளருக்கு இருக்க கூடாது.இது மறைமுகமாக தெளிவாக மேற்கொள்ளப்படும் ஒரு வகையான கட்டமைப்புகள் தானே.அப்படி இல்லை என்று நீங்கள் சொல்லலாம்.நான் தாமரை மீது காதல்கொண்டிருக்கும் ஒருவன்.அவர்களது வசீகரா பாடலிலெல்லாம் தாமரை மீது ஒரு காதல் பிறக்கிறது.அந்த காதலை ஒரு பொது சமூகம் பார்க்கின்ற பார்வையாகட்டும்,
இறுதி சுற்று சுதாவின் மீது கொண்ட காதலாகட்டும்,
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதியின் மீது வந்த ஈர்த்தலாகட்டும் ஏன் பொதுவெளியில் அவர்களை இழிவு படுத்துவதாகவோ பார்க்கப்படுகிறது.
ஒரு வைரமுத்துவையோ,முத்துக்குமாரையோ,கௌதம் மேனனையோ,கமலஹாசனையோ காதலால் வர்ணிக்கும் சூழல் ஏன் பெண் கலைஞர்களுக்கு என்னாலோ பொதுவாகவே செய்ய முடியா சூழல்.
பெண்களே...எல்லாரும் எழுதுங்கள் எல்லாருமே..
எழுத்தாளனை வாசகிகள் கொள்ளும் காதல்கள் எப்பொழுதும் பார்க்கப்பட்டே வந்தவை.பெண் எழுத்தாளர்கள் மீது வாசகன் கொள்ளும் காதலுக்குமான இடவெளியினை ஏற்படுத்தலாமே!!!
என் ஐடில இருக்கும் எழுதும் பெண்களில் நான் ஈர்ப்பு கொண்ட எழுத்துக்காரர்களை மட்டும் இதில் குறிப்படுகறேன்.
Shalin Maria Lawrence உங்க எல்லாப் பதிவுகளும்.முக்கியமா வட சென்னையில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன்கள் குறித்த பதிவு.
Isabella Bulbul உன்னோட எல்லா பதிவுலயும்.ஊடலோட ரசிக்கற எழுத்தாளர் நீ டார்லூ.முக்கியமா மெலனா
Bavaneedha Loganathan உன்னோட பதிவுகள் Reader படத்தின் பதிவிலிருந்தே.
Nivetha Murugesan உன்னோட காடு,யானை,பூனை பதிவுகள் ,கவிதைகள்.
Kirubashini Krishnarajah உன்னோட திமிரன் கவிதைகளிலிருந்து.
Bharathi Sankar உன்னோட கடிதங்களிலிருந்து.
கயல் விழி உன்னோ மீசை தாடி ஆண்கள் குறித்த கவிதைகளில் இருந்து.
- தமிழரசன்
(யம்மா...என் ஐடில முன்னாடி டேக்கு வரவங்கள மட்டும் டேக் பண்ணறேன்.மத்தவங்க டேக் பண்ண முடியாம பின்னாடி ஏதும் இருந்திட்டா.சண்டைக்கு வர வேண்டாம்.கோவிச்சுக்க வேண்டாம்.என்ட்ட சொல்லிடுங்கோ உங்கள சமாதானப்படுத்தற வலு என் கிட்ட இல்ல என்பதைக் கூறிக்கொண்டு)

கருத்துகள் இல்லை: