சனி, 23 செப்டம்பர், 2017

நட்சத்திர நடிகர்கள்தான் தமிழ் திரை மாபியாவின் சூத்திரதாரிகள் !

thurai muththu இன்றைய சினிமா முழுக்க முழுக்க பிளாக் டிக்கெட் விற்பனயை நம்பித்தான் இருக்கிறது . சட்டப்படி விற்றால் முதலே தரமுடியாத அளவு மிகப் பெரும் விலைக்கு படங்கள்  தியேட்டர்களின் தலையில் கட்டி அடிக்கபடுகிறது,
ரசிகர் மன்றங்களும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் வாங்கிய காசுக்காக  ஊடகங்களும் படத்தை பற்றி ஆஆஹா ஓஹு என்றெல்லாம் எழுதி ஒரு செயற்கையான சந்தையை உருவாக்கி விடுகின்றன,
இந்த செயற்கையான மதிப்புக்கள் படத்தின் முதல் வார மார்க்கெட்டை குறிவைத்து உருவாக்கபடுகிறது .  ரசிகர்களின் திரில் அளவுக்கு ஏற்ப திரை அரங்குகள் டிக்கெட் விற்பனையை உயர்த்தி பிளாக்கிலும் விட்டிலும்  காசை அள்ளி விடுகின்றன. .
இப்படிப்பட்ட மோசடி வியாபாரத்தில் நடிகர்கள்தான் முதல் குற்றவாளிகள் ... அவர்களின் ரசிகர் மன்ற அடிமைகளும் அவர்களின் காசில் தொழில் நடத்தும் கேடு கேட்ட ஊடகங்களும் இந்த மோசடிகளின் கூட்டாளிகள்
நட்சதிரங்களின் நடிக்கும் படங்கள் முழுக்க முழுக்க ஒரு மாபியா பாணி வியாபாரமாகி விட்டது, இந்த திரையுலக மாபியாக்களின் சூத்திரதாரிகள் வசூல் மன்னர்கள் அந்தஸ்தை பெற்ற நடிகர்கள்தான்.
 ரஜனி கமல் அஜித் விஜய் சூரியா தொடங்கி மோகன்லால் மம்மூட்டி என்று தென்னாடெங்கும் வியாபித்து உள்ளது இந்த திரை மாபியா. 

கருத்துகள் இல்லை: