திங்கள், 21 மே, 2018

நடிகை கஸ்தூரியின் விழுந்தோம்... மன்னியோம் ... ரசாபாசமாகி ....

A P S ASHOKKUMAR"@KasthuriShankar
தி தி சொம்பு என்று வார்த்தையை முதலில் நீங்கள் தான் பதிவிட்டீர்கள் அதில் அவர் எல்லை மீறியிருக்கிறார் தவறு தான் . நீங்கள் திமுகவை சாட வேண்டும் என்றால் தைரியமாக திமுக என்றே குறிப்பிடலாம் . அதை விட்டு திராவிட என்ற ஒரு இனத்தை கொச்சை படுத்துவது நியாயமா தோழி
வெப்துனியா :நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது.
பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
;நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல கருத்துகளை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில், இலங்கை படுகொலையை நினைவு படுத்தும் விதமாக, மே 18ம் தேதி தனது முகநுல் பக்கத்தில் “விழுந்தோம் இழந்தோம் எழுவோம் எனத் தொடங்கும் ஒரு கவிதையை பதிவு செய்திருந்தார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்திருந்தார்.
இதில் திமுக குறித்து இவர் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆனாலும், இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொலை செய்யப்பட காரணமாக திமுக-காங்கிரஸ் கட்சிகள் இருக்கிறது என அந்த கவிதையில் கூறப்பட்டதாக கருதிய திமுக விசுவாசி ஒருவர் கஸ்தூரியை தரக்குறைவாக விமர்சித்தார்.
அதைக்கண்ட கஸ்தூரி, கழக கண்மணி, தமிழகத்தின் தூண், தி தி சொ (திருட்டு திராவிட சொம்பு ?) என ஒரு பதிவை போட்டார். இதன் பின் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கும், அந்த திமுக விசுவாசிக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு களோபரமாகியது.

கருத்துகள் இல்லை: