புதன், 19 ஜூலை, 2017

சுத்தமான, கலப்படமில்லாத நாட்டு பன்றி ... மலேசியாவில் இருந்து ஒரு விசித்திர கோரிக்கை!

kaattaaru :“ஒரு பிராமணன் வயிற்றில் சூத்திரன் கொடுத்த உணவுடன் இறப்பின், அவன் அடுத்த பிறவியில் நாட்டுப்புறப் பன்றியாகப் பிறப்பான்.” ( வசிஷ்ட தர்மம்: இயல் 6, பா. 27-29)
‘சூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை’ என்ற தலைப்பில் தோழர் அம்பேத்கர் எழுதியது. (அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 – இயல் 3)
ஆக, உங்கள் இந்து தர்மங்களின் படியேகூட, நாட்டுப்புறப் பன்றிகள் எல்லாம், பார்ப்பனர்களின் முன்னோர்கள்தானே? பித்ருக்கள் தானே? நியாயமாக, நீங்கள் உண்மையிலேயே இந்து மத தர்மங்களைப் பின்பற்றுவதாக இருந்தால், ஒவ்வொரு ஆண்டும், ஆவணி அவிட்டத்தன்று, நீங்களே உங்கள் முன்னோர்களான பன்றிகளுக்குப் பூணுால் அணிவித்திருக்க வேண்டும். உங்கள் நன்றி மறந்த செயலை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நினைவூட்டுகிறார்கள். அதற்கு ஏன் கோபம்?
த.பெ.தி.க தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நல்ல சுத்தமான, கலப்பு இல்லாத நாட்டுப்பன்றியாகப் பார்த்து பூணுால் போடுங்கப்பா.. இல்லேனா… ஆச்சாரம் கெட்டுப்போயிரும்…

கருத்துகள் இல்லை: