வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சுப்பிரமணியம் சாமி : இந்தியாவின் பொருளாதாரம் விழுந்து நொறுங்கிவிடும் ஆபத்தில் .... வங்கிகள் திவாலாகும் ...

Prakash JP கரடியே காரி துப்பிய மொமென்ட்...... "இந்தியாவின் அனைத்து
வங்கிகளும் திவாலாகி , அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது" - பிஜேபி MP சுப்ரமணிய சுவாமி... தற்போது இந்தியாவின் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது . எந்த நேரத்திலும் அது விழுந்து நொறுங்கிவிடும் ஆபத்து உள்ளது. இதுபற்றி கடந்த ஆண்டே மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் அதை சட்டை செய்யவில்லை .. மாறாக வளர்சி குறைந்தாலும் கூட உயர்வதாக தவறாக அரசால் காட்டபப்டுகிறது. இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்காவில், இந்தியாவில் அனைத்து வங்கிகளும் திவாலாகி , அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது .. - பிஜேபி MP சுப்ரமணிய சுவாமி...
Suresh Ganesan இந்திய பொருளாதார த்தை பற்றியெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அவர் சொல்ல வருவதெல்லாம் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது எனவும் தன்னை நிதியமைச்சர் ஆக்கினால் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திடுவேன் என்று சொல்லாமல்  சொல்கிறார். அவ்வளவே.
Manoharan Thanga அவர் சொல்வதில் ஒரு சதம் உண்மையென்றாலும் அது இந்த அரசின் மாபெரும் தோல்வியே? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்.
Nanjai Francis இதுவும் ஒருவகை அரசியலே, தங்களுடைய தோல்வியை தன்னுடைய கட்சிக்காரங்க சிலரை வைத்து சொல்லச்சொல்வது !!

கருத்துகள் இல்லை: