ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அமித் ஷா மகன் ஒரே வருடத்தில் ,,, 16,0000 மடங்கு எப்படி? ... இதுதான் டிஜிடல் என்கிறதா?

prakash.jp.: வாட் எ கம்பனி அமித்து ஷா மோனே..
2013 - 2014 = நஷ்டம்
2014 - 2015 = 50,000 வருமானம்
2015 - 2016 = 80,50,00,000 வருமானம் (மோடி ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 16,0000 மடங்கு அதிகரிப்பு)
2016 - 2017 = கம்பனி மூடப்பட்டது (ஒரே வருடத்தில் 80 கோடி வருமானம் "பார்த்துவிட்டு"

மேலும், பிஜேபி தலைவர் அமித்து மகனுக்கு வெறும் 1.2 கோடி மதிப்புள்ள 2000 சதுர அடி இடத்தின் மீது சுமார் 25 கோடி லோன் அளித்துள்ளது மத்திய அரசின் IREDA, இது அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் நேரடி பார்வையில் இருந்த அமைப்பு. அதோடு, செக்குரிட்டி இல்லாத கடனாக பெயர் தெரியாத நபர்களிடம் இருந்து 5 கோடியை அமித்து மகனின் கம்பனி பெற்றுள்ளது..
இப்போது ரயில்வே கேபினட் அமைச்சராக உள்ள பியூஷ், வாண்டடாக வண்டியில் ஏறி, தனி நபரான அமித்து ஷா மகனுக்கு முட்டுகொடுகிறார்..
அமித்து சம்பத்தப்பட்ட இந்த ஊழலை வெளிகொணர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ரோகினி சர்மா மீது வழக்கம் போல, RSS சங் பரிவார கும்பல் கேரக்டர் அஸ்ஸாசினேஷன் செய்கிறார்கள்.. ஆனால், இதே பத்திரிகையாளர் தான் முன்பு சோனியா மருமகன் ராபட் வதேரா சம்பந்தப்பட்ட DLF விஷயத்தையும் வெளிப்படுத்தினார்.. அப்போது அவரை கொண்டாடிய பிஜேபி கும்பல், இப்போது திட்டுவது ஏன்?? மோடி பிஜேபி கும்பலின் ஊழல் எதிர்ப்பு வேஷம் கலைந்துவிட்டதா??

கருத்துகள் இல்லை: