சனி, 11 நவம்பர், 2017

தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் அகத்தியலிங்கத்திற்கு facbook பதிவுக்காக காவல்துறை சம்மன்

நக்கீரன் :தீக்கதிர் முன்னாள்பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம்  கடந்த செப்டம்பர் 13ம் தேதி அன்று தனது முகநூலில், ‘’நீதிபதி கிருபாகரன் யாருடைய ஊதுகுழல்? நிச்சயம் நீதியின் குரல் அல்ல..’’ என்று பதிவிட்டிருந்தார்.  இதையடுத்து, நீதிபதி கிருபாகரனை விமர்சித்ததற்காக அகத்தியலிங்கத்திற்கு சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆய்வாளர் அன்பரசன் பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அந்த நோட்டீசில், ‘’சு.பொ.அகத்தியலிங்கம் என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கில் நீதித்துறையை பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறையையும், நீதிபதிகளையும் விமர்சிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆகவே, இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் விளக்கத்தை இரண்டு நாட்களில் நேரில் தெரிவிக்க வேண்டும்.‘’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.<>அந்த நோட்டீசில் அக்டோபர் 17ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், நம்பவர் 10ம் தேதியான இன்றுதான் அகத்திலியங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஜெ.பி.;
நக்கீரன்

கருத்துகள் இல்லை: