ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

ஜாக்கியின் சிவராத்திரி .... யானை வழித்தடங்களை களவாடி பறவைகளின் நிம்மதியை குலைத்து

சுசிலா : "பிப்ரவரி 13, மஹா சிவராத்திரி ... ஜக்கியின் அருளுரை, சக்தி வாய்ந்த தியானம், தலை சிறந்த இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி. கலந்து கொள்ள வாருங்கள்."
இப்படி ஒரு விளம்பரம், இரு தினங்களாக, தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒலி பரப்பப்படுகிறது. இது வரை பக்தி வியாபாரமாக தான் மாற்றப்பட்டிருந்தது. இதனை கார்பெரேட் வியாபாரமாக மாற்றிய பெருமை மோடியின் பாஜக ஆட்சியையே சாரும். எல்லா சாமியார்களையும் வளர்த்து விடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறது. சென்ற ஆண்டின் போதே, ஒலி மாசு கட்டுப்பாடு வாரியம், அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிக ஒலியை, இந்த ஈஷா மையம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியது. இதனால்,பறவைகள் அதிக இன்னலுக்கு ஆளாகி, மிரண்டு இறந்திருக்கின்றன என்ற ஒரு விசயத்தை தெரிவித்து, தன்னுடைய கண்டனத்தையும் வெளியிட்டு இருந்தது. ஆனால், இதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டதா என்று இன்று வரை தெரியவில்லை.
இது இபப்டி இருக்க, இந்த ஆண்டும் பக்தி, கொண்டாட்டம் என்ற பெயரில் கூத்தடிக்கப் போகிறார்கள். வடநாட்டில், தசரா என்ற பெயரில், நடக்கும் கலாச்சார சீரழிவை, இங்கும் இந்த மஹாசிவராத்திரி என்ற பெயரில் கொண்டுவந்து, நம் மக்களையும், இந்த சாக்கடைக்குள் மூழ்கடிக்கப் பார்க்கிறது ... ஜக்கியின் ஈஷா மையம்.!
அ.செ. செல்வம் சாமியார் தொழில் இன்றைக்கு கார்ப்ரேட் தொழிலைவிட நாடுகடந்தும் கடைவிரித்து கொள்ளையடிக்கும்படி ஆகிப்போனது...தமிழ் நாட்டு .விவசாயிகள் டெல்லியில் அரை நிர்வாண முழுநிர்வாணப்போராட்டம் இருந்தும் வந்து சந்திக்காத மோடி ஜக்கி என்ற கேடி அழைத்தவுடன் ஓடோடி வருகிறார்..அவன் அடிக்கும் கொள்ளையில் இவர்களுக்கும் பங்கு உண்டுதானே

கருத்துகள் இல்லை: