சனி, 17 பிப்ரவரி, 2018

காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !


வினவு :தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக ‘போராடுகிறார்கள்’. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
பிப்ரவரி 14 வந்தாலே காவி வானரங்களின் கத்தல் அதிகமாகி விடுகிறது! தொலைக்காட்சிகளும் ஒருபக்கம் காதலர் தின சிறப்பு நிகழ்வுகளை காட்டிக் கொண்டே மறு பக்கம், அர்ஜுன் சம்பதையும், ‘பல அவதாரம்’ ராம சுப்புரமணியன் ஆகியவர்களைக் கொண்டு காது அலறும் வண்ணம் விவாதங்களை நடத்துகிறது.
நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தல், பல இடங்களில் கையில் தாலியுடன் வில்லன்களாக வலம்வருதல், பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுதல், அடித்தல், விரட்டுதல், படம் எடுத்தல் என எல்லா அநாகரீகங்களையும், அத்துமீறல்களையும் செயகின்றனர், இந்துமதவெறி கூட்டத்தினர்.

காதலர் தின எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்த சக்தி சேனா!

காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்!
பிரியா வாரியரின் வைரல் வீடியோவை பதிலாக சொன்ன ஜிக்னேஷ்


காதலர் தினத்தை எதிர்த்து இந்து மஹா சபை, ஸ்ரீராம் சேனா, பாரத் சேனா, சக்தி சேனா, பஜ்ரங்க தல் உள்ளிட்டவை இளம் ஜோடிகளைக் கண்டால் அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி அட்டூழியம் செய்து வருகின்றனர்.
காதலர் தின எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் சில இடங்களில் பொது சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். ஏன் எதிர்க்கிறார்கள்? காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது.
இதற்காகவே கலாச்சார பாதுகாவலர்களான தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான “மணிக்யா மலரயா பூவி” பாடல் வைரலாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி என்றும் அவர் கூறியுள்ளார். வெறுக்கக்கூடாது ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார். இதோடு பிரியா பிரகாஷ் வாரியரின் வீடியோவையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் இணைத்துள்ளார்.

*****

மண் குதிரைக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம்! – தினமணி பத்திரிக்கை செய்தி

காதலர் தின எதிர்ப்பு: நாய்க்குத் திருமணம்!
உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் காதலர்கள் பலரும் இந்த நாளை சிறப்பித்து வரும் நேரத்தில், குமரி மாவட்டத்தில் காதலை எதிர்த்து இந்து மகாசபா கட்சியினர் காதலர் தினத்தன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் இன்று 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை இந்து மகாசபா கட்சியினர் நடத்தினர். அவர்கள் 2 நாய்களை நாற்காலியில் அமர வைத்து அவற்றிற்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து இந்து மகாசபா தலைவர் சுரேஷ் கூறும் போது, காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். இது போன்ற தினங்களை கொண்டாடுவதால் டெல்லியில் மாணவி கற்பழிப்பு, காரைக்காலில் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
ஒரு அறிவார்ந்த சமூகம் என்பது ஜாதி, மத, இனம், ஏன் தேச எல்லை கடந்த ஒற்றுமையயும், உறவு மேம்பாட்டையும் விரும்பும். மனிதர்கள் ஒன்றுபடுதலை விரும்பாதவர்கள், அதாவது ஜாதியாக, மதமாக, குலமாக பிரிந்து பிரிந்து வேற்றுமை பாராட்ட விரும்புகிறவர்கள் காதலையும், அதன் வினை ஊக்கியான காதலர்தினத்தையும் எதிர்க்கிறார்கள்.
மனிதநேயம் படைத்தவர்கள் காதலையும், காதலர்தினத்தையும் வரவேற்கலாம்!
நன்றி : வெப்துனியா
காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை திருமணம்!
இந்து முன்னணி போன்ற மத அமைப்புகள்  காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்றும், இது இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் நாய் – கழுதைக்குத்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நாய் மற்றும் கழுதை அழைத்துவரப்பட்டன. இந்து முன்னணி மாநில நிர்வாகக்  குழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ்வரன், கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர், நாய்  – கழுதைக்கு  திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்ததும் உணவு மற்றும்  குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மொய் எழுதப்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிந்ததும்  திருமணத்தை நடத்தி வைத்த மற்றும் கலந்து கொண்ட 63 இந்து முன்னணியினரைக்  கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல கோவை கவுண்டம்பாளையம் பேருந்து  நிலையத்தில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக்  கொண்டாடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்றி : விகடன்
மகாராஷ்டிராவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!
https://twitter.com/ANI/status/963634809514885123/photo/1
இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள், தெருவில் நாங்கள் எந்த ஒரு தம்பதியையும் கண்டால் அவர்களை வன்மையாக கண்டிப்போம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி : ஜீ நியூஸ் தமிழ்
காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை!
லக்னோ பல்கலைக் கழகம் அளித்துள்ள சுற்றறிக்கை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகம், காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், வரும் 14-ம் தேதி மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும்.
அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித் திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலையின் உத்தரவை மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “ பல்கலைக்கு விடுமுறைவிடப்பட்ட நிலையில், மாணவர்களை பல்கலைக்கு உள்ளே நுழையக்கூடாது எனக் கூறுவது சரியில்லை. பல்கலைக்கு செல்லாமல் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அற்பத்தனமான சிந்தனை ” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காதலர் தினத்துக்கு லக்னோ பல்கலைக்கழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் யாரும் காதலர் தினத்தன்று பூக்கள், பரிசுகள், ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது இது மாணவிகளின் நலனுக்காக செய்யும் நடவடிக்கை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தி இந்து
ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்… காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு இந்துமுன்னணிஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுவதுடன் இந்நாளில் பொது இடங்களில் சந்தித்து காதலர் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி காதல் ஜோடிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடி வேரியில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நாய் மற்றும் ஆட்டுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், ஆட்டிற்கும், நாய்க்கும் மாலைகள் அணிவித்து திருமணத்தை இந்து முறைப்படி நடத்தினர். முன்னதாக நாய்க்கும் ஆட்டுக்கும் அலங்காரம் செய்து கொடிவேரி அணைப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
காதலர் தினக்கொண்டாட்டம் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அதனால் தான் காதலர் தினக்கொண்டாட்டத்திற்கு ஆண்டு தோறும் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
______________________
இப்படி  இந்தியாவெஙகும் பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்கள் காதலர் தினத்தன்று காட்டுமிராண்டித்தனமாக வேலைகளை செய்தனர். இவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு சீரழிவுதான் காரணமென்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்கள் கருதும் அந்தச் சீரழிவு ஆதிக்க சாதி, மதவாத சிந்தனைகளுக்கு காதல் இடையூறாக இருக்கிறது என்பதே. சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் நடப்பதை பொறுக்க முடியாத இந்த சாதி-மதவெறியர்கள் தடியின் துணைகொண்டு காதலை முறிக்க நினைக்கிறார்கள். அதே தடியை இளைய தலைமுறை கையெலெடுக்கும் போது இந்துமதவெறி இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்படும்.

காதலர் தினத்திற்கு எதிராக அட்டூழியம் செய்யும் சங்கப்பரிவார கும்பலை விரட்ட வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது நக்கலைட்ஸ் நண்பர்களின் இந்த வீடியோ…

கருத்துகள் இல்லை: