செவ்வாய், 15 மே, 2018

திருடர்களின் கையில் இந்தியா .. சாதா திருடன் பணத்தை திருடுவான் .. பாஜக திருடன் அரசாங்கத்தையே திருடுவான்

Ganesh Babu : உங்கள் நட்பு வட்டத்தில் ஜனநாயகம், நியாயம், நீதி, நேர்மை,
Powers of governor, Rule of Law பற்றியெல்லாம் ஆங்காங்கே ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் பி.ஜே.பி காமெடிப்பீசுகளின் பதிவுகளில் சென்று இந்தப் படத்தை மட்டும் post செய்துவிட்டு நகர்ந்துவிடுங்கள். பிறகு அவர்கள் காயடிக்கப்பட்ட வெறிநாயைப் போல (அதாவது எச்ச.ராஜாவைப் போல) கதறிக் கதறி சாவதை நீங்கள் தள்ளி நின்று ரசிக்கலாம்.
சுசிலா : நாகாலாந்தில், 2 இடங்களை மட்டுமே வென்று, கூட்டணி மூலம் ஆட்சியை பற்றிக்கொண்ட பாஜக, கர்நாடகாவில் , 104 இடங்களை பெற்றும், ஆட்சியமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர்,கோவா மாநிலங்களில் தவறவிட்ட காங்கிரஸ் தற்போது, மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமை மற்றும் சித்தராமையா அவர்களின் சாமர்த்திய, அறிவுபூர்வமான நகர்வை பாராட்டியே தீரவேண்டும்.
Raj Dev :· காங்கிரஸ் மிகவும் விவேகத்துடனும், சாமர்த்தியத்துடனும் இந்த முறை செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஊடகங்கள் அனைத்துமே தமது கருத்துக்கணிப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டு பிஜெபியை ஆராதித்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் முடிவின் விளைவை சரியாக கணித்து காங்கிரஸ் அதிரடியாக குமாரசாமியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டது. வெற்றி மமதையில் இருந்த பா.ஜ.க இதை எதிர்பார்க்காதது மட்டுமல்ல காங்கிரசின் அசைவுகளை கவனிக்கவும் மறந்தது. மற்றபல மாநிலங்களில் பிஜெபி ஏய்த்தது போல கர்நாடகாவில் முடியாதென காங்கிரசின் கர்நாடக தலைவர்கள் வலுவை வைத்து ஓரளவுக்கு சொல்ல முடியும். அதே நேரம் யூ.ஆர். அனந்தமூர்த்தி போன்ற எழுத்தாளுமைகள் கொண்டாடிய சித்தராமையா முதல்வராக தொடர முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

கருத்துகள் இல்லை: