புதன், 16 மே, 2018

தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்.. E V M மெசின் துணை ..

Swathi K : வர இருக்கும் சட்டிஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அனைத்து சீனஅதிபரை போல மோடியும் நான் தான் நிரந்தர பிரதமர் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..
மாநில சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் கமிஷின் மற்றும் EVM உதவியுடன் பிஜேபி மாபெரும் வெற்றி பெறும் (எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அமிட்ஷா முடிவு பண்ணுவார்).. 2014ல் மோடி பெற்ற வெற்றியை விட அதிகமான இடங்களில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் "தேர்தல் கமிஷின் மற்றும் EVM" உதவியுடன் பிஜேபி மாபெரும் வெற்றி பெறும்.. ஏற்கனவே இந்தியாவின் தன்னிச்சை அமைப்புகள் அனைத்துக்குள்ளும் காவி கூட்டம் நுழைந்து விட்டதால்.. இதெல்லாம் எளிதாக நடக்கும்..
We have transitioned into a dictatorship long back.. every institution in this country has been systematically infiltrated and has been compromised... they are just managing perceptions.
நாடு முழுவதும் மக்கள் பொறுமை இழந்து கத்துவார்கள்.. கதருவார்கள்.. தெருவுக்கு வந்து போராடுவார்கள்.. அரசு போராட்டத்தை அடக்கும்.. அதெல்லாம் தாண்டி போராட்டம் அதிகமாகும்.. ஒரு பக்கம் மக்கள் போராட்டம் தொடரும்.. இன்னொரு பக்கம் மோடி அலை'னு பொய்யான செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும்.. மற்ற நாடுகளில் நடந்தது போல் மக்கள் புரட்சி இங்கும் ஆரம்பமாகும்.. இதெல்லாம் இன்னும் 2-3 வருடங்களில் ஆரம்பமாகும்.... அங்கு இருந்து தான் மாற்றம் ஆரம்பமாகும்.. அதுவரை அமிட்ஷா & மோடி தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டு தான் இருப்பார்கள்..
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது.. இந்தியாவின் தன்னிச்சை அமைப்புகளில் தனக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவிகளில் உக்காரவைத்து இந்த அமைப்புகளை தனது கண்ட்ரோலின் கீழ் கொண்டுவந்தது..

SC (சுப்ரீம் கோர்ட்), RBI (இந்திய ரிசர்வ் வங்கி), CVC (Central Vigilance Commission - நடுவண் விழிப்புணர்வு ஆணையம்), CAG (Comptroller and Auditor General - தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்), CBI (Central Bureau of Investigation - மத்தியப் புலனாய்வுத் துறை), IT Department (Income Tax Dept - வருமான வரி துறை அமைப்பு), EC (Election Commission - தேர்தல் ஆணையம்), மற்றும் பல.. மேலே குறிப்பட்ட அமைப்புகள் அனைத்தும் இப்போது மறைமுகமாக "மோடி & அமித்ஷா"க்கு கீழ் இயங்குபவை தான்..
அரசாங்க அமைப்பு என்று மட்டும் இல்லை.. இந்தியாவின் மீடியாக்கள், உலக அளவில் பொருளாதார ரேட்டிங் கொடுக்கும் அமைப்புகள்(ex. Moody's).. கருத்து கணிப்பு அமைப்புகள் (ex. Pewglobal).. இந்த மாதிரி அமைப்புக்களையும் பணமோ, அழுத்தமோ கொடுத்து தனக்கு தேவைப்பட்டது போல கருத்துகணிப்புகள், பொருளாதார ரிப்போர்ட் வாங்கப்பட்டது.. GDP மற்றும் பொருளாதார டேட்டா எல்லாம் கோல்மால் செய்யப்படுகிறது என்று உலகத்தின் முக்கியமான பொருளாதார நிபுணர்கள் சொல்லியாச்சு..
இத்தனை அமைப்புகளையும் தன்னோட கைக்குள் கொண்டுவந்து, தான் நினைத்ததை சாதிக்கும் இந்த அரசு.. தேர்தல் ஆணையத்தை மட்டும் சுயமாக, நேர்மையாக இயங்க வைக்கிறது என்று நீங்கள் நினைத்தால்.. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்.. உங்களுக்கு உண்மை தெரியவரும்..
இங்கு தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்.. வெற்றி பெறுவோம் என்று மோடி மேடையில் முழங்குகிறார்.. மீடியா மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தேர்தல் நாடகம் அரங்கேறுகிறது... இது தான் பிஜேபி அரசியல்..

கருத்துகள் இல்லை: